குமரநல்லூர்
குமரநல்லூர் | |
---|---|
சிற்றூர் | |
குமரநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி | |
ஆள்கூறுகள்: 10°46′0″N 76°3′0″E / 10.76667°N 76.05000°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 15,346 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 679552 |
தொலைபேசி குறியீடு | 0466 |
வாகனப் பதிவு | KL-52 |
அருகில் உள்ள நகரம் | பாலக்காடு |
சட்டமன்றத் தொகுதி | திரிதலா |
குமரநல்லூர் (Kumaranellur) என்பது இந்தியாவின், கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் பட்டம்பி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது கப்பூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்டது. இது பாலக்காடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து மேற்கு நோக்கி 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஊர் அண்டை மாவட்டத் தலைமையகமான மலப்புறத்திலிருந்து தெற்கு நோக்கி 48 கி.மீ. தொலைவிலும், திரூரிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும், வளஞ்சேரியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும், பட்டாம்பியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், குன்னங்குளத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், பொன்னானியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், குட்டிப்புரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும், திரிதாலாவிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், எடப்பாள் நகரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த இடம் பாலக்காடு மாவட்டம் மற்றும் மலப்புறம் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. மலப்புறம் மாவட்டன் குட்டிப்புரம் இந்த இடத்திலிருந்து வடக்கே உள்ளது, எடப்பாள் இந்த இடத்திலிருந்து மேற்கு நோக்கி உள்ளது.[1] குமரநல்லூர் ஊரானது, கல்வி, மருத்துவம் போன்ற நோக்கங்களுக்காகு மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி, எடப்பாள், குட்டிபுரம் ஆகிய ஊர்களைச் சார்ந்துள்ளது. இது திருத்தாலை சட்டமன்றத் தொகுதி மற்றும் பொன்னானி மக்களவைத் தொகுதி ஆகியவற்றுக்கு உட்பட்டது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, குமரநல்லூர் ஊரின் மொத்த மக்கள் தொகை 7,260 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 3,465 என்றும், பெண்களின் எண்ணிக்கை 3,795 என்றும் உள்ளது.[1]
ஊரில் குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- வி. டி. பட்டதிரிபாட், நாடக ஆசிரியர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
- மகாகவி அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி (ஞானபீட விருது வென்றவர்)
- திரிதல கேசவ பொதுவாள், தயம்பகா மேஸ்ட்ரோ
- எம். டி. வாசுதேவன் நாயர், மலையாள எழுத்தாளர், ஞானபீட் விருது பெற்றவர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Census of India: Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. Retrieved 10 December 2008.