குன்னக்குடி சுப்பலட்சுமி
| குன்னக்குடி சுப்பலட்சுமி | |
|---|---|
| பிற பெயர்கள் | என். சுப்பலட்சுமி |
| பிறப்பு | 24 ஏப்ரல் 1931 குன்னக்குடி, சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
| இறப்பு | 21 மார்ச்சு 2010 (அகவை 78) ஹைதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| இசை வடிவங்கள் | மேல்நாட்டுச் செந்நெறி இசை கருநாடக இசை |
குன்னக்குடி சுப்பலட்சுமி (Kunnakudi Subbalakshmi) (24 ஏப்ரல் 1931 – 21 மார்ச் 2010) பிரபல கர்நாடக இசைப் பாடகி ஆவார். இவர் பிரபல வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதனின் அக்கா ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் சென்னை மாகாணத்தில் முருகன் கோவிலுள்ள குன்னக்குடியில் பிறந்தார்.
இவரது பெற்றோர் ஸ்ரீ ராமசாமி சாஸ்திரி மற்றும் திருமதி. மீனாட்சி ஆவர். இவரின் தந்தை சமஸ்கிருதத்திலும் தமிழிலும் அறிஞர் ஆவார். அவர் கர்நாடக இசையிலும் கதகலக்ஷேபம் இசையமைப்பாளராகவும் இருந்தார். சுப்பலட்சுமி இளம் வயதிலேயே தனது தந்தையிடமிருந்து தென்னிந்திய பாரம்பரிய இசையைக் கற்றார்.
தொழில்
[தொகு]சுப்பலட்சுமி தனது தங்கை சுந்தரலட்சுமி மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோருடன் சேர்ந்து இசை நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினார் . சுந்தரலட்சுமி சிறு வயதிலேயே இறந்தார். இவர் காரைக்குடியிலும், குன்னக்குடியிலும் தனி குரல் கச்சேரி கொடுக்கத் தொடங்கினார்.
இவர் 19 வயதில் எஸ். சி. நடேசனை (ஒரு பிராமண ஐயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்) திருமணம் செய்துகொண்டார். அவர் இராணுவத்தில் இருந்ததால் அவர்கள் அடிக்கடி இடம் பெயர்ந்தார்கள், இது சுப்பலட்சுமியை அகில இந்திய வானொலி மூலம் இசை நிகழ்ச்சிகள் நடத்த வைத்தது . நடேசன் தில்லி, ஐதராபாத், புனே, அகமதுநகருக்கு மாற்றப்பட்டார். சுப்பலட்சுமி ஹைதராபாத் மற்றும் தில்லியில் உள்ள வானொலி மையங்களில் நிகழ்ச்சிகள் நிகழ்த்தினார். அதன் பிறகு, இவரின் கணவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதுநகருக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் 20 ஆண்டுகள் இருந்தார். நிதி நிலை காரணமாக சுப்பலட்சுமியால் தனது திறமையை சித்தரிக்க முடியவில்லை.
இந்த தம்பதிக்கு பத்மினி, லலிதா மற்றும் ராஜேஸ்வரி என்ற மூன்று மகள்கள் இருந்தனர். குடும்பத்தின் நிதி நிலைமை மோசமாக இருந்தது மற்றும் 1984 இல். நடேசன் ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் ஏஓசியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். சுப்பலட்சுமி அகில இந்திய வானொலியில் 10 ஆண்டுகள் நிகழ்ச்சி நடத்தினார். இந்த தம்பதி செகந்திராபாத் அருகே உள்ள சீதாபல் மண்டியில் தங்கி இசை கற்பிக்கத் தொடங்கினர்.
பின்னர் இருவரும் 2002 ஆம் ஆண்டு சைனிக்பூரிக்கு இடம்பெயர்ந்தனர். இவரின் கணவர் நடேசன் தனது 83 வயதில் 2003 சூன் 21 அன்று இறந்தார். சுப்பலட்சுமி இசை கற்பித்தல் தொடர்ந்தார். சன் டிவி , தூர்தர்ஷன் மற்றும் ஜெயா டிவியில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
தியாகராஜா , முத்துசுவாமி தீக்சிதர், சாம சாஸ்திரி எழுதிய 2500 இக்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் இவருக்குத் தெரியும். இவருடைய தந்தை எழுதிய பல கீர்த்தனைகளையும் இவர் அறிந்திருந்தார்.[1] சங்கீத வித்வானான உப்பலபதி அங்கையாவின் நினைவாக சங்கீத க்ஷீரசாகரம் மற்றும் தியாகராய கான சபை இணைந்து 5 நாள் இசை விழாவை சபாவின் இடத்தில் 2005 இல் ஏற்பாடு செய்தன. மூத்த தாள கலைஞர்கள் ஈடுபட்டனர்.
விருதுகள்
[தொகு]இவருக்கு 2005 ஆம் ஆண்டில் தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது .
இறப்பு
[தொகு]சுப்பலட்சுமி 2010 மார்ச் 21 அன்று அதிகாலை 2:10 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Strung together" (in en-IN). The Hindu. 2009-05-08. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Strung-together/article15938238.ece.