குணவீர பண்டிதர்
Jump to navigation
Jump to search
குணவீர பண்டிதர் 12-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வாழ்ந்தவர். சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவர். சமண சமயத்தைச் சேர்ந்தவர்.
நேமிநாதம் என்னும் இவரது தமிழ் இலக்கண நூல் [1] நேமிநாத தீர்த்தங்கரர் என்னும் சமண தீர்த்தங்கரர் பெயரால் எழுதப்பட்டது. இவர் எழுதிய மற்றொரு நூல் வெண்பாப் பாட்டியல் என்று அழைக்கப்படும் வச்சணந்திமாலை என்னும் பாட்டியல் நூல். வச்சணந்தி முனிவர் இவரது ஆசிரியர். இவர் பெயரால் இந்த நூல் செய்யப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
கருவிநூல்[தொகு]
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ எழுத்து, சொல் இலக்கணங்களை மட்டும் கூறும் நூல்