குடேகோட்டை தேன் கரடி காப்பகம்
| குடேகோட்டை தேன் கரடி காப்பகம் | |
|---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
| அமைவிடம் | பெல்லாரி மாவட்டம், கருநாடகம், India |
| அருகாமை நகரம் | பெல்லாரி, பெல்லாரி மாவட்டம் |
| ஆள்கூறுகள் | 15°14′N 76°31′E / 15.233°N 76.517°E |
| பரப்பளவு | 167.59 km2 (64.71 sq mi) |
| நிறுவப்பட்டது | 2013 |
| நிருவாக அமைப்பு | Kamalapura Wildlife Subdivision, Karnataka Forest Department |
குடேகோட்டை தேன் கரடி காப்பகம் (Gudekote Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் கருநாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்கு காப்பகம் ஆகும்.[1][2][3] இது 38.48 km2 (14.86 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த காப்பகம் இந்திய சோம்பல் கரடியான தேன் கரடி (மெலுர்சசு உரசினசு) பாதுகாப்பிற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. இது ஆசியாவின் இரண்டாவது தேன் கரடி சரணாலயமாகும். முதலாவது காப்பகம் தரோஜி தேன் கரடி காப்பகம் ஆகும்.
நவம்பர் 2013இல் கருநாடக அரசு 3848.84 எக்டேர் பரப்பளவில் குடேகோட்டை காட்டுயிர் காப்பகம் (பகுதி அ) குடேகோட்டை விரிவாக் காப்பகம் (பிளாக் ஆ) மற்றும் ஹல்சகரா காப்புகாடுகளை குடேகோட் தேன் கரடி காப்பகமாக அறிவித்து அரசு அறிவிப்பு எப் இ இ 72 எப் டபுள்யூ எல் 2013 மூலம் 11 நவம்பர் 2013 அன்று அறிவிப்பு வெளியிட்டது.[4] 21 செப்டம்பர் 2016 அன்று வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பு எண். எப் இ இ 432 எப் டபுள்யூ எல் 2014இல், இந்தக் காப்புக் காட்டின் பரப்பளவினை பரப்பளவு 47.54 km2 (18.36 sq mi) km2 (′ID1] sq mi) ஆக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டில், மற்றொரு அரசாங்க அறிவிப்பின் மூலம் அரசிதழ் அறிவிப்பு எண். எப் இ இ 62 எப் டபுள்யூ எல் 2019, தேதியிட்ட 16 மே 2019, கூடுதல் 120.04 km2 (46.35 sq mi) கிமீ2 (′ID3] சதுர மைல் ஒதுக்கப்பட்ட காடுமூலம் குடேகோட் விரிவாக்க தேன் கரடி கரடி காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 167.59 km2 (64.71 sq mi) கிமீ2 ஆக அதிகரித்தது.[5]
இந்திய தேன் கரடியைப் பாதுகாப்பதற்காக கருநாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இரண்டாவது வனவிலங்கு சரணாலயம் இதுவாகும் (மெலர்சசு உர்சினசு).
தாவரங்களும் விலங்கினங்களும்
[தொகு]தேன் கரடி என்ற முதன்மையான பாலுட்டி விலங்கினத்தைத் தவிர, இந்தியச் சிறுத்தை, பாங்கோலின், முள்ளம்பன்றி, இந்திய நரி, இந்தியக் காட்டுப் பூனை, இந்திய நட்சத்திர ஆமை, ஆசிய பனை புணுகுப்பூனை, இருதலை மணியன் போன்ற பல்வேறு விலங்குகளும் இந்த காப்பகத்தில் வாழ்கின்றன. இந்த காப்பகம் பல்வேறு பறவை இனங்களின் இருப்பிடமாகவும் உள்ளது. மேலும் இவற்றில் சுமார் 130 வெவ்வேறு உயிரினங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.[4][6]
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே மோதல்
[தொகு]குடேகோட்டைக் காப்பகம் பிரகடனம் செய்திருப்பது மனித-விலங்கு மோதல்களை பெருமளவில் குறைக்க உதவியது. இதற்கு முக்கியக் காரணம், மரங்கள் அல்லாத வன உற்பத்திகளை சேகரிப்பது மற்றும் வனவிலங்கு சரணாலயத்தில் பிற தலையீடுகள் போன்ற மனித நடவடிக்கைகள் இப்பகுதி வனவிலங்குச் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பின்னர் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளன. வேட்டையாடும் தடுப்பு முகாம்கள் வனவிலங்குகளின் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளன.[7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ESZ Notifications, Ministry of Environment, Forest and Climate Change Government of India". envfor.nic.in (in Indian English). India: Ministry of Environment and Forest, Government of India. Retrieved 2019-02-08.
- ↑ "Karnataka's second sloth bear sanctuary to open its gates to visitors soon – Times of India". The Times of India (in Indian English). India. Retrieved 2019-02-08.
- ↑ Malagi, Shivakumar G. (2018-09-16). "Gudekote pleads: We can no longer Grin and bear it". Deccan Chronicle (in Indian English). India: Deccan Chronicle. Retrieved 2019-02-08.
- 1 2 "..:: Karnataka Forest Department ::." aranya.gov.in. Government of India. Retrieved 2019-01-25.
- ↑ "Karnataka Forest Department". aranya.gov.in. Retrieved 2022-01-29.
- ↑ "Gudekote Bear Sanctuary | JLR Explore" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2019-01-25.
- ↑ "Gudekote sanctuary: Keeping in mind 'bear' necessities". Deccan Herald (in ஆங்கிலம்). 2018-12-15. Retrieved 2019-01-25.
- ↑ "Bear in mind, don't disturb! at Gudekote Bear Sanctuary". The New Indian Express. Retrieved 2019-01-25.