கில்லி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கில்லி
இயக்கம்தரணி
தயாரிப்புஏ. எம். ரத்னம்
ஸ்ரீ சூர்யா பிலிம்ஸ்
கதைதரணி
இசைவித்யாசாகர்
நடிப்புவிஜய்
த்ரிஷா
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுஎஸ். கோபிநாத்
வெளியீடு2004
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்29 கோடி

கில்லி (Ghilli) (தமிழாக்கம்: எதற்கும் துணிந்தவர்) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2001-ல் வெளியான பிரெண்ட்ஸ் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

வகை[தொகு]

மசாலாப்படம் / காதல்படம்

கதை[தொகு]

சரவணவேலு (எ) வேலு, மாநிலளவு கபடி விளையாட்டு வீரர். இவரவது தந்தை, சிவசுப்பிரமணியம், சென்னை காவல் துணை ஆணையராக பணிபுரிபவர். மகன் கபடிமேல் கொண்ட ஆர்வம் மற்றும் கல்வியில் நாட்டம் இல்லாதிருப்பாதாலும், தந்தை-மகன் உறவு மெலிந்தேயிருந்தது. வேலுவின் தாயார் மகனின் மேல் அன்பு மிகுந்திருந்தார். தங்கை புவனா தமயனின் செயல்பாடுகளை தந்தை காதில் ஒதி சிக்கல்களை உண்டாக்குவார், இருப்பினும், அண்ணனை விட்டுகொடுக்கமாட்டார்.

இவ்வாறிருக்க மறுபுறம், மதுரையில், ஈவு மற்றும் நேயமற்ற முத்துபாண்டி என்றழைக்கப்படும் கதையின் எதிர்குண நடிகர், அவ்வூரிலே வாழ்ந்து வரும் தனலட்சுமி எனும் பெண்ணின் பால் ஈர்க்கப்படுகிறார், மேலும் தன்னை மணமுடிக்கவும் கட்டாயப்படுத்துகிறார். தங்கை மீது கொண்ட அன்பால் தட்டிக்கேட்கும் இரு அண்ணகளையும் கொள்கிறார் முத்துபாண்டி. தனலட்சுமியின் தந்தை அஞ்சி, ஊர் அறியாமல் மகளை அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மைத்துனரது வீட்டிற்கு அனுப்ப முடிவெடுத்து, பணம், சான்றிதழ்களை கொடுத்து அனுப்பிவைக்கிறார்.

தப்பிவோடும் வழியில் முத்துப்பாண்டியிடம் மாட்டிக்கொள்கிறார் தனலட்சுமி. இதனிடையே, மதுரைக்கு கபடி ஆட வரும் வேலு, தனலட்சுமியின் துயரைக்கண்டு அவளை சென்னையில் தனது இல்லத்திற்கு காத்து இட்டுச்செல்கிறார்.

வேலு தன் நண்பர்கள் உதவிகளுடன், கடவுச்சீட்டு, வெளிநாட்டு நுழைவுச்சான்றிதழ் மற்றும் பயணச்சீட்டு போன்றவற்றை அமெரிக்கா செல்ல ஏற்பாடுச் செய்கிறார்.

உள்துறை அமைச்சர் இராஜபாண்டி, முத்துப்பாண்டியின் தந்தையாவார். அஃதே, அமைச்சர், வேலுவின் தந்தையென அறியாது துணை ஆணையர் சிவசுப்பிரமணியனிடமே, வேலுவை கொணர ஆணையிடுகிறார்.

தன்னில்லத்திலேயே தங்கிருந்த தனலட்சுமியையும், அடைக்கலம் அளித்தது தன் மகன் என்றறிய வரும் சிவசுப்பிரமணியம், அவர்களைப் பிடிக்க முற்பட, இருவரும் தப்பி, கலங்கரை விளக்கின் மேலிடையில் புகுகின்றனர்.

வேலுவின் மேல் ஈர்ப்படையும் தனலட்சுமி அமெரிக்கா செல்ல மனமில்லாமல் போகிறார். தனலட்சுமி அமெரிக்க பயணிக்கயிருக்கும் அதே நாளில் தான் வேலு கபடியாட்டத்தின் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் நாளுமாகும்.

தனலட்சுமியை வானூர்தி நிலையத்தில் விட்டு, போட்டியில் பங்கேற்கும் வேலு தன் காதலை உணர்கிறார். சற்றுநேரம பின் அயலகம் செல்லாது கபடியாட்ட கலத்திற்கே வருகிறார் தனலட்சுமி. இருவரும் காதலை உணர்ந்தனர். மறுபுறம் முத்துப்பாண்டியும் கலத்திற்கு வருகிறார். வேலுவிற்கு முத்துப்பாண்டிக்கு நடக்கும் மோதலின் இறுதியில் மின்விளக்கின் இணைப்பின் மேல் விழுந்து உயிர்பிரிகிறார். ஈற்றில் தனலட்சுமி, வேலு மற்றும் அவரது குடும்பத்துடன் இணைகிறார்கள்.

நடிகர்கள்[தொகு]

விஜய் - சரவணவேலு (எ) வேலு

த்ரிஷா - தனலட்சுமி  

பிரகாஷ் ராஜ் - முத்துப்பாண்டி

ஆஷிஷ் வித்யார்த்தி - சிவசுப்ரமணியம், வேலுவின் தந்தை

தனிகெள்ள பரணி  - இராஜபாண்டி, முத்துப்பாண்டியின் தந்தை

ஜானகி சபேஷ் - சரவணவேலுவின் தாய்

குழந்தை ஜெனிபிர் - புவனா, சரவணவேலுவின் தங்கை

தாமு - ஓட்டேரி நரி, சரவணவேலுவின் நண்பர்

பிரம்மானந்தம் - ஐயர்

மயில்சாமி (நடிகர்) - நாராயணன்


தயாரிப்பு[தொகு]

விஜய், ஒக்கடு எனும் தெலுங்குத் திரைப்படத்தின் முதன்மை நடிகராக நடிக்க விருப்பமுற்றத்தைத் தெரிவித்து, தயாரிப்பாளர் இரத்தனத்தை மறுவாக்க உரிமையை  வாங்க முற்படுத்தினர். இயக்குநர் தரணியை  படக்குழுவில் சேர்த்தனர். இதன்முன், இரத்தனம் மற்றும் தரணியின் இயக்கத்தில் வெளிவந்த தூள் எனும் திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது. தரணியின் வழக்கமான படக்குழுவினர்களான ஒளிப்பதிவாளர் கோபிநாதும்  மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகரும் இணைந்தனர். ராக்கி ராஜேஷ் மற்றும் ராஜு சுந்தரம், சண்டைக்காட்சி மற்றும் ஆடல் பயிற்சியாளர்களாக தேர்தெடுக்கப்பட்டனர். பின், திரிஷா கிருஷ்ணன் பெண் முதன்மை வேடத்திற்கு ஒப்புக்கொண்டார். மறுபுறம், பிரகாஷ் ராஜ், ஒக்கடு படத்தில் புரிந்த எதிர்குண வேடத்தை மீண்டும் இந்தப் படத்திலும் புரிய ஒப்புக்கொண்டார். தாமு மற்றும் பிரபு தேவாவின்   உடன்பிறந்தவரான நாகேந்திர பிரசாதும் துணைநடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆஷிஷ் வித்யார்த்தி, ஜானகி சபேஷ், குழந்தை ஜெனிபர் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னணி பாடகர், கலைமாமணி டி. கே. கலா, முத்துப்பாண்டியின் தாயாராக நடிக்க ஒப்புக்கொண்டார். களவாணி மற்றும் பசங்க போன்ற திரைப்படங்களின் முன்னணி நடிகரான விமல் இப்பபடத்தில் கபடிக்குழுவில் விளையாட்டு வீரராகவும், 'அதிகார ஒப்பு'  அளிக்கப்படாத துணை இயக்குனராகவும் பணியாற்றி  உள்ளார்.

விஜய் முன் நடித்துவந்த திருமலை எனும் அதிரடி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2003யின் நடுவில் தொடங்கியது. சென்னையில், மயிலாப்பூர் மற்றும் பெசன்ட் நகர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் அறிமுக சண்டைக்காட்சிகள் மற்றுமொரு பாடல் படப்பிடிப்புகள் விலையுயர்ந்ததாகும். கலங்கரை விளக்கம் மாதிரியும் நிறுவப்பட்டது. அதிரடி மற்றும் துரத்தும் காட்சிகள், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அருகாமையில் பதிவு செய்யப்பட்டது. படத்தின் உச்சகட்ட காட்சிகள் ஆயிரம் மக்கள் சூழ்ந்த இடத்தில், பிள்ளையார் முழுநிலவு (சதுர்த்தி) நாளன்று எடுக்கப்பட்டது.

துணுக்குகள்[தொகு]

  • தெலுங்குத் திரைப்படமான ஒக்கடு திரைப்படத்தின் மறுதயாரிப்பே இத்திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒலிபரப்பு உரிமை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. [1]

வெளியிணைப்புகள்[தொகு]

  1. https://m.facebook.com/VTLteam/photos/a.121170564624194.23075.120952511312666/1075756902498884/?type=3
"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்லி_(திரைப்படம்)&oldid=3708796" இலிருந்து மீள்விக்கப்பட்டது