கிருஷ்ணம்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிருஷ்ணம்பள்ளி, இந்தியாவின் தெற்கு மாநிலமான தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில், குடியாத்தம் தாலுகா, மேல்பட்டி அஞ்சலின் கீழ் உள்ள ஒரு கிராமமாகும். இந்த கிராமம் பேர்ணாம்பட்டிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் மேல்பட்டி வழியாக அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் அதிகம் பேசப்படும் மொழி தெலுங்கு மற்றும் இரண்டாவது தமிழ்.

கிராமத்தில் ஒரு ஆரம்ப பள்ளி உள்ளது 1987 ல் துவங்கப்பட்டது. இக்கிராமத்தில் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோயிலை நாம் காணலாம்.

இக் கிராமத்தில் சில சிறிய மலைகளும், கிராமங்களும் உள்ளன. இக் கிராமத்தில் வறட்சி என்றாலும், இதன் முக்கிய வருவாய் ஆதாரம் விவசாயம், தற்போதைய தலைமுறையில் எழுத்தறிவு விகிதம் 90% க்கு மேல் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணம்பள்ளி&oldid=2538424" இலிருந்து மீள்விக்கப்பட்டது