கிருட்டிணா கிருபளானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருட்டிணா கிருபளானி
பிறப்பு(1907-09-29)29 செப்டம்பர் 1907
கராச்சி
இறப்பு(1992-04-27)27 ஏப்ரல் 1992
சாந்திநிகேதன்
தொழில்சுதந்திரப் போராளி, ஆசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர்
தேசியம்இந்தியன்
குறிப்பிடத்தக்க விருதுகள்1969: பத்ம பூசண்
துணைவர்நந்திதா

கிருட்டிணா கிருபளானி (Krishna Kripalani) (1907 செப்டம்பர் 29 - 1992 ஏப்ரல் 27) இவர் ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். இவர்,இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி மற்றும் இந்திய இலக்கியங்கள் குறித்து ஏராளமான புத்தகங்களை எழுதினார்.[1]

இராம்சந்த் பி. கிருபளானியின் மகனான கிருட்டிணா 1907 செப்டம்பர் 29 அன்று கராச்சியில் பிறந்தார்.[2] கராச்சி மற்றும் ஐதராபாத்தில் இருந்து தனது ஆரம்பக் கல்வியை முடித்த இவர் , மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர், இவர் உயர் படிப்புக்காக லண்டனுக்குச் சென்றார். வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், சட்டம் மற்றும் மானுடவியல் ஆகியவற்றிற்காக லிங்கனின் விடுதியிலும் இலண்டன் பொருளியியல் பள்ளியிலும் படித்தார்.[3]

சுதந்திர இயக்கம் மற்றும் சாந்திநிகேதன்[தொகு]

நாட்டிற்கு திரும்பி, ஆரம்பத்தில் 1931 இல் கராச்சியில், இவர் லாகூரில் சட்டப் பயிற்சி செய்யத் தொடங்கினார். இருப்பினும், இவர் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டார். அது இவரது சட்ட வாழ்க்கையை குறைத்தது. அந்த நேரத்தில், இவர் பெங்காலியைக் கற்க ஆர்வமாக இருந்தார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இவர் அந்த நோக்கத்துடன் சாந்திநிகேதனுக்கு சென்றார். இரவீந்திரநாத் தாகூர் இவரை மிகவும் கவர்ந்ததால், இவருக்கு விஸ்வ பாரதியில் விரிவுரையாளர் பதவியை வழங்கினார். கிருபளானி 1933 முதல் 1946 வரை விஸ்வ பாரதிக்காக பணியாற்றினார்.[3]

திருமணம்[தொகு]

சாந்திநிகேதனில் தங்கியிருந்தபோது, இரவீந்திரநாத் தாகூரின் இளைய மகளான மீரா தேவியின் மகள் நந்திதாவை சந்தித்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.[3]

வாழ்க்கை[தொகு]

1946 ஆம் ஆண்டில், ஜே.பி. கிருபளானி மற்றும் ஜவகர்லால் நேருவின் வேண்டுகோளின் பேரில், இவர் இந்திய தேசிய காங்கிரசில் அதன் பொதுச் செயலாளராக சேர்ந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், இவர் பல கட்சி பதவிகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவர் பல முக்கிய சர்வதேச நிகழ்வுகளுக்கு அழைக்கப்பட்டார் . மேலும், பல்வேறு தலைப்புகளில் புத்திசாலித்தனமான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1950இல், ஜப்பானுக்கு சென்ற போது, இரவீந்திரநாத் தாகூர்: ஒரு சுயசரிதை என்ற நூலை வெளியிட்டார் . 1962 மற்றும் 2011 க்கு இடையில் இந்த புத்தகம் 4 மொழிகளில் 44 பதிப்புகள் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.[3][4]

1969 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1974 முதல் 1980 வரை மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக இருந்தார். சாகித்திய அகாதமி 1954இல் நிறுவப்பட்டது . கிருட்டிணா கிருபளானி அதன் முதல் செயலாளராக நியமிக்கப்பட்டு 1971 வரை இருந்தார். அதன்பிறகு, சிம்லாவில் உள்ள தேசிய புத்தக அறக்கட்டளையில் பணியாற்றினார்.[3]

இறப்பு[தொகு]

இவரது மனைவி நந்திதா 1967 இல் இறந்தார்.[5] இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஓய்வுக்குப் பிறகு, இவர் சாந்திநிகேதனில் குடியேறி, 1992 ஏப்ரல் 27, அன்று இறந்தார்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. "Brief Biodata" (PDF). Rajya Sabha. Archived from the original (PDF) on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Rammohun Roy and Modern India. Gokhale Institute of Public Affairs. 1976. https://books.google.co.uk/books?id=2YMeAAAAMAAJ&dq=1907. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Padma Bhusan Krishna Kripalani". The Sindhu World. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.
  4. "Kripalani, Krishna, 1907-1993". WorldCat Identities. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.
  5. Gurudev Rabindranath Tagore, a biography by Rekha Sigi. Diamond Books. https://books.google.com/?id=ZW93OdoQIfIC&pg=PA24&lpg=PA24&dq=Nandita+Kripalani+died#v=onepage&q=Nandita%20Kripalani%20died&f=false. பார்த்த நாள்: 5 August 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிணா_கிருபளானி&oldid=3928906" இலிருந்து மீள்விக்கப்பட்டது