கிம் ஆம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிம் ஆம் (கொரிய மொழி: 김암) எட்டாம் நூற்றாண்டுகொரிய வானியலாளர்; கணியவியலாளர்; படைமேலர். இவர் சில்லா அரசு காலத்தில் யின்-யாங் மற்போர் வல்லுனராகவும் மாயவித்தை செய்பவராகவும் விளங்கினார்.

வாழ்க்கை[தொகு]

இவர் படைத்தளபதி கிம் யூழ்சினின் பேரன் ஆவார்.[1][2]

கிம் ஆம் யின்-யாங் மற்போரைச் சீன நாட்டு சாங்கன் மாகாணத்தில் பயின்றார். இம்மற்போர் ஒரு தொன்ம மற்போர் வகையாகும்.[2][3] இவர் பொருட்கள் உருமாறும் கோட்பாடு (Tungap ipsong pop) எனும் தாவோயியப் படைப்பை எழுதினார். இது சண்டைக்கலையின் தொன்ம உருவு (Tungkapbop) என்றும் தண்டுகளைத் தவிர்க்கும் கோட்பாடு (Tun'gap ipsong pop) என்றும் அறியப்படுகின்றது.[2][3][4] இவரது புங்-சு-சோல்.(Pung-su-sol) எனும் புவியியல் கோட்பாடுதான் கொரிய அறிவியலில் முதலில் பதிவாகிய புவியியல் மேற்கோளாகும்.[5] கி.பி 769 இன் ஓர் பழங்கதைப்படி இவர் ஓர் மந்திர ஓதலால் புயலை உருவாக்கி பஞ்சத்தை உருவாக்கவிருந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தைக் கொன்றுள்ளார். இதில் இருந்து இவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினரைப் போலவே இவரும் மாயவித்தை செய்பவராக இருந்துள்ளார் எனத் தெரியவருகிறது.[1]

சில்லா அரசு இவருக்கு அலுவற்பணிகளைத் தந்துள்ளது. இப்பணியின் பெயர் "அண்ட நிகழ்வு வல்லுனர்",[3] அல்லது "அறிவியல், வானியல் பேரறிஞர்" (Sachon Paksa)[2] or "வானியல் மாபெரும் பேராசிரியர்" எனப் பலவாறாக மொழிபெயர்க்கப்படுகிறது; அவரது காலத்தில் இருந்த வானியல் பேராசிரியர் எவருக்கும் தரப்படாத ’மாபெரும்’ எனும் அடைமொழி இவருக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது.[1]

இவர் 797 இல் யப்பானின் நாரா மன்றத்துக்கு தூதுவரக அனுப்பப்பட்டுள்ளார், அங்கு இவர் யப்பான் பேரரசரான கோனினின் பெருமதிப்பைப் பெற்றுள்ளார்.[2] (ஆ-டோ கியூயிi)என்ற யப்பான் பயண நூலை எழுதிய கிம் ஆம் இவராகத்தான் இருக்கவேண்டும் என நம்பப்படுகிறது.[6][7]

இவர் போர்ப்படை தளபதி மட்டுமன்றி, போர்க்கோட்பாட்டாளரும் ஆவார். இவர் பயேகாங் படையணிக்கு . "ஆறுவரிசை அணிவகுப்புமுறை. "யில் பயிற்சியளித்து வழிநடத்தினார்.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_ஆம்&oldid=3175942" இலிருந்து மீள்விக்கப்பட்டது