காளான் வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Cultivated shiitake mushrooms

காளான் வளர்ப்பு, என்பது ஓரு சுயதொழில் வேலைவாய்ப்பு, இது விவசாயிகளுக்கு நல்ல இலாபத்தை தருகிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப பெருகிவரும் புரதப் பற்றாக்குறை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தினை போக்கிடவும், மக்களின் வாழ்க்கைத தரத்தினை உயா்த்திடவும் ஓரு நல்ல தீர்வாக காளான் வளர்ப்பு அமைகிறது.

Shiitake growing s

காளான் வளர்ப்பு;[தொகு]

ஓரு சாதாரண வீட்டில் தரைத்தளத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ கூரை வேய்ந்து இரண்டு அறைகளாக பிரிக்க வேண்டும். இதில் ஒரு அறை காளான் வித்து பரப்பும் அறையாகவும், மற்றொரு அறை காளான் வளர்ப்பு அறையாகவும் இருக்க வேண்டும். அறையின் வெப்பநிலை 25 முதல் 30 டிகிரி செல்சியஸ அளவு இருக்க வேண்டும்

காளான் வித்து உருவாக்குதல்[தொகு]

மக்காச்சோளம், கோதுமை, சோளம், காய்ந்த வைக்கோல் போன்றவை தளப் பொருளாக பயன்படுத்தலாம். இதனை தூய்மையான போத்தல்களில், காற்று புகாத பஞ்சை வைத்து அடைத்து நுண்கிருமி நீக்கம் செய்த பின்னர் காளான் வித்துக்களை அறை வெப்பநிலையில் 15 முதல் 18 நாட்கள் வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் காளான் படுக்கையில் வளர்வதற்கேற்ப காளான் வித்து கிடைக்கும்.[1]

Harvestingoystermushroomcultivatedinbaggedsawdustmixture
காளான் வளர்ப்பு

காளான் வித்திடுதல் என்பது காளான் வளர்ப்பிற்கான வேளாண் செயல்முறை ஆகும். வைக்கோலைப் பதப்படுத்தி உலர்த்தி, நெகிழிப் பைகளில் அடுக்கி உருளைப் படுக்கைகள் தயார் செய்யப்படும். நெகிழி பையின் நடுவில் துளையிட்டு, அதன் அடிப்பகுதியில் நூலால் கட்டி, பையைத் திறந்து வைக்கோல் துண்டுகள் நிரப்பப்படும். அதன் மேல் காளான் வித்துக்கள் தூவப்படும். இதேபோன்று 5 அடுக்குகளை தயார் செய்து பையின் மேற்பரப்பை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி ஓரளவு இருக்கமாகக் கட்டி படுக்கைகள் தயார் செய்யப்படும்.[2]

காளான் படுக்கை தயாரிப்பு[தொகு]

ஐந்து மணி நேரம் தண்ணீர் ஊற வைக்கப்பட்டு ஒரு மணி நேரம் நன்கு வேக வைத்து வடிகட்டப்பட்ட வைக்கோலை எடுத்து தூய்மையான பாலீதீன் பைகளில் 5 செ.மீ அளவு உயரத்திற்கு நன்கு அழுத்தி வைத்து அதன் மீது 25 கிராம் அளவுள்ள காளான் வித்தை தூவ வேண்டும். ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்கு இருக்கமாக கட்ட வேண்டும். பிறகு பாலீத்தீன் பையை குடிலினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விட வேண்டும். தினமும் கை தெளிப்பான் கொண்டு காளான் படுக்கையில் தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த 15 அல்லது 20 நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதை காணலாம். பிறகு சுத்தமான கத்தியை கொண்டு பாலிதீன் பையைக் கிழிக்க வேண்டும்.

காளான் அறுவடை[தொகு]

பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும். 23 நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்து விட வேண்டும். தினமும் அல்லது ஒரு நாள் விட்டு அறுவடை செய்ய வேண்டும்.

பயன்கள்[தொகு]

இன்றைய நாளில் அசைவ உணவினை போன்ற சுவையை காளான் தருவதினால் மக்கள் அதிகம் காளான் வகைகளை விரும்பி உண்ணத் துவங்கி விட்டனர். இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. இதில் உள்ள மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துகிறது.

காளான் வகைகள்[தொகு]

காளானில் பட்டன் காளான், பால் காளான் மற்றும் சிப்பி காளான் என பலவகை இருக்கிறது. இதில் சிப்பி காளான் வளர்ப்பது சுலபமானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "web page". http://kaalanvalarpu.blogspot.in/. பார்த்த நாள்: 12 சூலை 2017. 
  2. முனைவர் ச.மோகன் (2015). வேளாண் செயல்முறைகள். தமிழ்நாடு பாடநூல் கழகம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளான்_வளர்ப்பு&oldid=3800987" இருந்து மீள்விக்கப்பட்டது