கால்நடைத் தீவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புற்களை மேயும் பசு

கால்நடைத் தீவனம் (cattle feed) என்பது கால்நடைகளான ஆடு, மாடு, பசு, எறுமை போன்ற மனிதரைச் சார்ந்திருக்கும் விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவாகும்.

உண்ணும் முறை[தொகு]

  1. பயிர்களை மேய விடுதல்
  2. பயிர்களை அறுத்து விலங்குகள் இருக்கும் பட்டியில் வைத்தல்
  3. குதிர் போன்ற பெரும் சேமிப்புகளிலிருந்து அளித்தல்: பொதுவாக குதிரில் கால்நடைகளைக்கட்டி விட்டு அதனை உண்ண வைப்பர்.
  4. புண்ணாக்கு நீரில் கலந்தோ கலக்காதோ இடுவது பழக்கம். பால் கறக்கும் மாடுகளுக்கு பருத்தி கொட்டையும் புண்ணாக்கும் கலந்து கொடுப்பது வழக்கமாகும்.

புண்ணாக்கு வகைகள்[தொகு]

  1. தேங்காய்ப் புண்ணாக்கு
  2. கடலைப் புண்ணாக்கு
  3. எள்ளுப் புண்ணாக்கு

வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும்[தொகு]

பொதுவாக பண்ணையாளர்களும் உழவரும் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் சேர்ந்தே செய்வர். பயிர்களில் மனிதருக்கு தேவையில்லதவற்றை கால்நடைகள் உண்ணுவதோடு, இது பொருளாதார ரீதியிலும் பயனளிக்கின்றது. கலந்து இரண்டையும் செய்வதே பொதுவாக உலகெங்கும் காண இயலும்[1].

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்நடைத்_தீவனம்&oldid=3502514" இலிருந்து மீள்விக்கப்பட்டது