தமிழர் பருவ காலங்கள்
தமிழர் பருவ காலங்கள் என்பது, பண்டைக்காலம் முதல் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பருவகாலப் பிரிவுகளைக் குறிக்கும். தமிழர்கள் ஓர் ஆண்டை கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என ஆறு பருவங்களாக பிரித்தனர்.
- கார்காலம்: இது தமிழ் மாதமான ஆடி, ஆவணி யை உள்ளடக்கியது.
- குளிர்காலம்: இது தமிழ் மாதமான புரட்டாசி, ஐப்பசி யை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும்.
- முன்பனிக்காலம்: தமிழ் மாதமான கார்த்திகை, மார்கழி யை உள்ளடக்கியது.
- பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான தை, மாசி யை உள்ளடக்கியது.
- இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான பங்குனி, சித்திரை யை உள்ளடக்கியது.
- முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான வைகாசி, ஆனி யை உள்ளடக்கியது.
பண்டைத் தமிழ் மக்கள் மாறிமாறி வரும் பருவ காலங்களைக் காலத்தின் மாற்றங்களாக மட்டும் கருதாமல் மக்கள் வாழ்வியலுடனும், அவர்கள் வாழும் நிலத்துடனும் பிணைத்துப் பார்த்தார்கள். தமிழர் நிலப் பிரிவுகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றுக்கு உரித்தான பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. இதன்படி, முல்லை நிலத்துக்குக் கார் காலமும்; குறிஞ்சி நிலத்துக்குக் கூதிர் காலமும், முன்பனிக் காலமும்; மருதத்துக்கும், நெய்தலுக்கும் எல்லாப் பருவகாலங்களும், பாலை நிலத்துக்கு இளவேனில், முதுவேனில், முன்பனி ஆகிய காலங்களும் உரியவை.[1]
பெரும் பொழுது
[இரண்டு மாதம் ஒரு பெரும் பொழுதாகும்]
கார்காலம் - மழை மேகங்களால் சூழ்ந்த காலம் [கார் - மேகம்]ஆடி, ஆவணி மாதங்கள்
கூதிர்காலம் - குளிர் காற்று வீசும் காலம் [கூதிர் - குளிர் காற்று]புரட்டாதி, ஐப்பசி மாதங்கள்
முன்பனிக்காலம் - விடியலில் பனி பெய்யும் காலம் கார்த்திகை, மார்கழி மாதங்கள்
பின்பனிக்காலம் - காலையில் பனி பெய்யும் காலம் தை, மாசி மாதங்கள்
இளவேனிற்காலம் - வசந்த காலம் பங்குனி, சித்திரை மாதங்கள்
வேனிற்காலம்/முதுவேனிற்காலம் - கோடை காலம் வைகாசி, ஆனி மாதங்கள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தொல்காப்பியம் பொருளதிகாரம் 6 - 12.