காயத்திரி சண்முகம்
காயத்திரி சண்முகம் (Gayatri Shunmugam) சிங்கப்பூர் நாட்டு அழகியும் பதுமையும் ஆவார்..[1]
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
காயத்திரி சிங்கப்பூரில் பிறந்தவர். சிறு வயதிலேயே சென்னைக்குக் குடிபெயர்ந்தார். ஆறு வயதின்போது மீண்டும் சிங்கப்பூர் திரும்பினார். புனித மார்கரெட் இடைனிலைப் பள்ளியில் கல்வி கற்று, புனித ஆண்டிறியூ இளையோர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார், பின்னர் பதுமையாகத் தொடர்ந்த இவர், சிங்கப்பூரின் மிஸ் சிங்கப்பூர் யுனிவர்சு என்ற பட்டத்தைப் பெற்றார். இப்பட்டத்தைப் பெற்ற சிங்கப்பூரின் முதல் தமிழ்ப் பெண் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Beauty talk". The Hindu. 6 செப்டெம்பர் 2008. Archived from the original on 8 நவம்பர் 2012. https://web.archive.org/web/20121108061449/http://www.hindu.com/mp/2008/09/06/stories/2008090650320100.htm. பார்த்த நாள்: 22 October 2010.