காந்தியடிகள் நற்பணிக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தியடிகள் நற்பணிக் கழகம்
அமைவிடம்
கும்பகோணம், தமிழ் நாடு
தகவல்
தொடக்கம்1975
நிறுவனர்குருசாமி பாலசுப்பிரமணியன்
பள்ளி மாவட்டம்கும்பகோணம்
மாணவர்கள்500 [1]

காந்தியடிகள் நற்பணிக் கழகம், குருசாமி பாலசுப்பிரமணியன் என்பவரால் 1975-ம் ஆண்டு கும்பகோணத்தில் தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டுவரும் காலை மற்றும் மாலை வேலைகளில் இயங்கும் பள்ளிக்கூடம் ஆகும்.

ஆரம்ப காலம்[தொகு]

மளிகைக்கடை வைத்திருக்கும் குருசாமி பாலசுப்பிரமணியன், வேலைக்குச் செல்லும் மாணவர்களுக்கு காலை 6 முதல் 8 வரையிலும், மாலை 6 முதல் 9 வரையிலும் இலவசமாக பாடங்களைக் கற்றுத்தர ஏற்பாடு செய்துள்ளார். 1975-ம் ஆண்டு முதல் இப்பள்ளி இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் வாடகைக் கட்டடத்தில் இது இயங்கியது.

உதவிகள்[தொகு]

குருசாமி பாலசுப்ரமணியன் தனது 3 நண்பர்களுடன் இணைந்து, காந்தியடிகள் நற்பணி மன்றம் என்ற இலவச கல்வி மையத்தை உருவாக்கினார். பொதுமக்களின் நன்கொடை உதவியுடன் 12 வகுப்பறைகள் கட்டப்பட்டு, இங்கு கல்விச் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள்[தொகு]

இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை; இங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் ஊதியம் பெறுவதில்லை. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களில் பலர் ஏற்கெனவே இங்கு படித்து, அரசுப் பணி உள்ளிட்ட பணிகளில் சேர்ந்தவர்களாவர். அவர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தில் இங்கு வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

பிற வகுப்புகள்[தொகு]

காந்தியடிகள் நற்பணிகழகத்தில் இந்தி வகுப்புகளும், போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. அதிகாரப்பூர்வ தளம்

உசாத்துணை[தொகு]