காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில்
காஞ்சிபுரம் ரிஷபேசம் - (இடபேசம்). | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் ரிஷபேசம் - (இடபேசம்). |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ரிஷபேஸ்வரர். |
காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் (ரிசபேசம் - (இடபேசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். இச்சிவலிங்கம், காஞ்சி திருவேகம்பத்தில் சிவகங்கை தீர்த்தத்தின் மேற்கு கரையில் உள்ள தனிக்கோயிலாகும். மேலும், இவ்விறைவரை ரிசபம் வழிபட்டமையால் ரிசபேசம் எனப்படுகிறது இக்கோயில் குறிப்புகள்; காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
தல வரலாறு
[தொகு]திருமாலை தாங்குவதால், தன்னைப்போல பலசாலி - ஆற்றலுடையவர் உலகில் எவருமிலர் என்று செருக்குற்றிருந்த கருடனின் செருக்கையடக்க எண்ணிய திருமால், கருடன் மேலமர்ந்து கயிலைக்குச் சென்றார், கருடனை கயிலை வாயிலில் நிறுத்திவிட்டு தான்மட்டும் உள்ளே சென்றார். உள்ளே சென்ற திருமால் நெடுநேரமாகியும் வரவில்லை. கருடனின் செருக்கை உணர்ந்த ரிசபதேவர், தன்னுடைய சுவாச (சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், வெளிவிடும்போதும்) காற்றால் கருடனை முன்னும் பின்னும் அலைக்கழித்தார். இவ்வாறு அலைக்கழிந்ததால் கருடனின் இறகுகள் ஒடிந்துபோக, கருடன் திருமாலை அழைத்தது. திருமால், நடந்தவற்றை இறைவனுக்குத் தெரிவிக்க, இறைவனார் ரிசபத்தை உள்ளேயழைத்து, தன்ஆணையின்றி இவ்விதம் செய்ததால், அப்பழி நீங்க காஞ்சிக்கு சென்று சிவகங்கையில் நீராடி, சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபாடாற்றுமாறு பணித்தார். ரிசபதேவரும் அவ்வாறே காஞ்சிக்கு சென்று வழிபட்டார் என்பது வரலாறு.[2]
தல பதிகம்
[தொகு]- பாடல்கள்: இடபேச்சர வரலாறு (தழுவக் குழைந்த படலம்: இடபேச்சர வரலாறு - கலிநிலைத் துறை)--காஞ்சிப் புராணம் | தழுவக் குழைந்த படலம்: இடபேச்சர வரலாறு பாடல்: 73 முதல்
- பொழிப்புரைகள்: (தழுவக் குழைந்த படலம்: 73 முதல் )[3]
அமைவிடம்
[தொகு]இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியில் உள்ள திருவேகம்பத்தில், சிவகங்கை தீர்த்தத்தின் மேற்கு கரையில் உள்ள தனிக்கோயிலாகும். மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்பத்தில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4]
போக்குவரத்து
[தொகு]- வான்வழி:' வானூர்தி சேவை இல்லை; உலங்கு வானூர்தி மூலம் காஞ்சிபுரம் வந்தடைய, காஞ்சியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்திலுள்ள உலங்கூர்தி இறங்குதளத்தில் இறங்கி சீருந்து மூலம் இக்கோயிலை அடையலாம்.
- இரும்புத் தடம்: தொடருந்து மூலாமாக; தலைநகர் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகவும், திருப்பதியிலிருந்து அரக்கோணம் மார்க்கமாகவும், காஞ்சி தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலை, சீருந்து மூலமாகவும், தானியுந்து மூலமாகவும் சென்றடையலாம்.
- சாலை வழி: பேருந்திலோ, அல்லது சீருந்துலோ, காஞ்சி வந்தடைய நான்கு திசையில் சாலை வழியுள்ளன; வடகிழக்கில், சென்னையிலிருந்து திருப்பெரும்புதூர் வழியாகவும் (75 கிலோமீட்டர்); தென்கிழக்கில், செங்கல்பட்டிலிருந்து வாலாசாபாத் வழியாகவும் (40 கிலோமீட்டர்); வடமேற்கில், விழுப்புரத்திலிருந்து வந்தவாசி வழியாகவும் (80 கிலோமீட்டர்); தென்மேற்கில், பெங்களுரிலிருந்து வேலூர் வழியாகவும் (275 கிலோமீட்டர்) இக்கோயில் நகரை வந்தடையலாம்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 61. தழுவக்குைழந்த படலம் (2023- 2449) | 2096 இடபேச்சர வரலாறு
- ↑ "shaivam.org | ரிஷபேசம் - (இடபேசம்)". Archived from the original on 2015-06-03. Retrieved 2016-04-12.
- ↑ tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருவேகம்பப் படலம் இடபேச்சர வரலாறு | பாடல்: 73 முதல்
- ↑ dinaithal.com | ரிஷபேசம் - (இடபேசம்)
- ↑ tripadvisor.in 15 temples in Kanchipuram