காஞ்சன் பிரவா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சனா பிரபா தேவி
துணைவர்வீர் விக்ரம் கிசோர் தேவ வர்மன் மாணிக்கிய பகதூர்
குழந்தைகளின்
பெயர்கள்
கிரித் விக்ரம் கிசோர் தேவ வர்மன்
மரபுபன்னா இராச்சியம் (பிறப்பால்)
மாணிக்கிய வம்சம் (திருமணம் மூலம்)
தந்தையத்வேந்திர சிங்
மதம்இந்து

மகாராணி காஞ்சன் பிரபா தேவி(Kanchan Prava Devi) பன்னா இராச்சியத்தின் மன்னருடைய மகளும், திரிபுரா இராச்சியத்தின் மன்னர் வீர் விக்ரம் கிசோர் தேவ வர்மன் மாணிக்கிய பகதூரின் மனைவியும் ஆவார்.[1] இவரது கணவரின் மறைவுக்குப் பின்னர் பிராயமடையாத அவர்களது மகனுக்காகப் பகர ஆளுனராகவும் 1947-1949 வரை பணியாற்றியுள்ளார்.[2] இவர் அகர்தலாவில் எம்பிபி கல்லூரியை நிறுவினார்.

வாழ்க்கை[தொகு]

இவரது ஆட்சிக் காலத்திலேயே திரிபுரா விடுதலையடைந்த இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக திரிபுராப் பகுதியில் பாதிக்கப் பட்டவர்களையும், அகதிகளையும் மீள்குடியேற்றம் செய்வதில் இவர் முக்கிய பங்காற்றினார். அகர்தலாவில் உள்ள மகாராஜா வீர் விக்ரம் கல்லூரி இவரால் நிறுவப்பட்டது.

ஆட்சிக் காலம்[தொகு]

இவருக்கு ஏ. பி சட்டர்ஜி என்பவர் திவானாக இருந்து உதவி புரிந்தார். திரிபுரா மாநிலத்தில் இந்தியப் பிரிவினையுடன் தொடர்புடைய வன்முறையால் பாதிக்கப்பட்ட அகதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

1948 ஆம் ஆண்டில், இவர் இந்திய அரசாங்கத்தால் ஆட்சி மன்ற குழுவை கலைத்துவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்.[3] இவர் திரிபுராவை சுதந்திர இந்தியாவில் இணைப்பதை மேற்பார்வையிட்டார். இந்தியாவின் அழுத்தத்தால் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[4] 1949 இல் இந்தியாவுடன் மாநிலம் இணைக்கப்பட்டபோது இவர் ஆட்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சன்_பிரவா_தேவி&oldid=3904439" இலிருந்து மீள்விக்கப்பட்டது