காஜ்ரா
தோற்றம்


காஜ்ரா (Gajra) என்பது தெற்காசியப் பெண்கள் பண்டிகைக் காலங்கள், திருமணங்கள் அல்லது அன்றாடப் பாரம்பரிய நிகழ்வுகளின் போது அலங்கார உடைகளின் ஒரு பகுதியாக அணியும் மலர் மாலையாகும். இவை பொதுவாகப் பல்வேறு வகையான மல்லிகைப் பூக்களால் தயாரிக்கப்படுகின்றன. உரோசா, கனகாம்பரம், பார்லேரியா ஆகியவை பூக்களும் காஜ்ரா தயாரிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.[1] இதைப் பின்னல் சுருட்டலுடன் அணியலாம். தென்னிந்தியா, மகாராட்டிர, குசராத்து ஆகிய மாநிலங்களில் உள்ள பெண்கள் வழக்கமாகப் பாரம்பரிய உடைகளுடன் இவற்றை அணிவார்கள். இது முக்கியமாகப் பண்டிகைக் காலங்கள், திருமணங்களின் போது மணிக்கட்டில் அணியப்படுகிறது.
காஜ்ரா என்பது ஒரு சிகை அலங்காரத்தை அலங்கரிக்கும் ஓர் அலங்காரமாகும். காஜ்ரா என்பது இந்தியாவில் நகைகளில் செய்யப்படும் ஒரு வகை முத்து வேலைப்பாட்டையும் குறிக்கிறது.
படங்கள்
[தொகு]-
வரலாற்று ரீதியாக, குப்தப் பேரரசின் கூந்தலைச் சுற்றி மல்லிகை காஜ்ரா
-
தலை முடியினைச் சுற்றி மல்லிகை காஜ்ராவுடன் தாரா. சுமார் கி.பி. 11ஆம் நூற்றாண்டு
-
காஜ்ராவுடன் குச்சிப்புடி நடனக் கலைஞர்
-
பாரம்பரியச் சாயல் காஜ்ரா சோலாபித் தாவர அடிப்படையிலான கடற்பாசிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஒடிசி நடனக் கலைஞர்களால் அணியப்படுகிறது.
-
தெற்காசியாவில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகளின் ஒரு பகுதியான ஹால்டி, மெகந்தி அல்லது சங்கீத விழாவிற்கு மலர் அலங்காரங்களுடன் மணமகள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gurcharan Singh Randhawa and Amitabha Mukhopadhyay, ed. (1986). Floriculture in India. Allied Publishers. p. 607. ISBN 978-81-7023-057-1.