உள்ளடக்கத்துக்குச் செல்

காசுவார் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசுவார் தீவு
மன்னார் வளைகுடாவில், காசுவார் தீவு
புவியியல்
பரப்பளவு0.118541 km2 (0.045769 sq mi)
நிர்வாகம்
இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
வட்டம்இராமேசுவரம்

காசுவார் தீவு (Koswari Island) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஓர் தீவாகும்.[1]

விளக்கம்

[தொகு]

இத்தீவானது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தத் தீவில் இருந்த பவளப் பாறைகளின் பெரும் பகுதி முந்தையக் காலத்தில் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டதால், தீவின் நான்கில் ஒரு பகுதி நீரில் மூழ்கிவருகிறது. மனிதர் யாரும் வாழாத இத்தீவானது மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். இது தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. துறையினரின் அனுமதி இன்றி இங்கு யாரும் செல்லக்கூடாது. இத்தீவின் ஆக்கிரமிப்பு இனமான சீமைக் கருவேலம் மரங்கள் உள்ளன. அவற்றை வனத்துறை அகற்றி அதற்கு பதிலாக உள்ளூர் தாவர இனமான பூவரசு போன்றவற்றை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழகத்தில் மூழ்கிய தீவுகள் குறித்து நீங்கள் அறிவீர்களா? - சூழும் மற்றுமோர் ஆபத்து". BBC News தமிழ். Retrieved 2025-01-21.
  2. Koswari Tivu / Koswari Island
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசுவார்_தீவு&oldid=4271475" இலிருந்து மீள்விக்கப்பட்டது