உள்ளடக்கத்துக்குச் செல்

கவிமுகில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிமுகில் ( Kavimukil, பிறப்பு: சூன் 16, 1968) தமிழக் கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். ` இவர் எழுதிய "பூட்டாங்கயிறு" எனும் புதுக்கவிதை நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் இராகவம்பாள்புரம் ஊராட்சியில் உள்ள ஆர்சுத்திப்பட்டில் பாவாடை - ரூபாவதி ஆகியோருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.[2] இவரின் இயற்பெயர் பா.சக்திவேல் என்பதாகும். சென்னைப் பல்கலைகழகத்தில் இளங்கலைத் தமிழ் பயின்றார்.

படைப்புகள்

[தொகு]

கவிதைத் தொகுப்புகள்

[தொகு]
  • கவிமுகில் கவிதைகள் - 1
  • சூரியத் துளிகள்
  • சின்ன உளிகள்
  • குப்பைகள்
  • ஆர்சுத்திப்பட்டு
  • மோட்டுவளை
  • பூட்டாங்கயிறு
  • சுருக்குப்பை
  • சொக்கப்பனை
  • காலச் சப்பரம்
  • கவிமுகில் கவிதைகள் - 2
  • கவிமுகில் கவிதைகள் - 3
  • தீக்கொழுந்துத் தேனருவி
  • வானவில்லின் எட்டாவது நிறம்
  • மௌனம் கலைத்த வினாக்கள்
  • கல் பொரு சிறுநுரை
  • மரத்தை உலுக்கிய பறவைகள் (படமும் கவிதையும்)

உரைநடை

[தொகு]
  • கார் காலம்
  • எதிரே உன் ஏணி

புதினம்

[தொகு]
  • முச்சந்தி
  • வெள்ளாவி

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிமுகில்&oldid=4197539" இலிருந்து மீள்விக்கப்பட்டது