கவின்மலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவின்மலர் தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்.[1][2] தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பிறந்து, நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கல்வியும், ஆரம்பகால பணியும்[தொகு]

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (ஏடிஎம். கல்லூரி) கணினித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றியவர். ஊடகத்துறை மீது இருந்த ஆர்வம் காரணமாக பத்திரிக்கைத் துறையில் சேர்ந்தார்.

பணியாற்றிய பத்திரிகைகள்[தொகு]

எழுத்தாளராக[தொகு]

ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் தொடர்ந்து தன் எழுத்தின் மூலமும், பேச்சின் மூலமும் செயல்பாட்டரங்கில் இருக்கிறார். தமிழ் இலக்கிய வட்டாரத்திலும் நன்கு அறியப்பட்ட பெண் எழுத்தாளரான[3] இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு 2014 சென்னை புத்தகக் காண்காட்சியில் கயல் கவின் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. தமிழ் இதழ்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை என தொடர்ந்து எழுதுவது மட்டுமல்லாமல் தொடர்ந்து மேடைகளிலும் பேசி வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சாத்தான்குளம்: சமூக ஊடகங்களில் அத்துமீறல்களை கொண்டாடும் சில போலீஸார்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
  2. "களத்திலிருந்து...: நாதியத்துக் கெடக்கோம்..." Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
  3. "பாஜகவை விமர்சித்த பெண் எழுத்தாளர் பற்றி முகநூலில் ஆபாசமாக பதிவிட்ட நபர்- வழக்குப்பதிவு செய்த காவல்துறை !" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவின்மலர்&oldid=3598292" இலிருந்து மீள்விக்கப்பட்டது