களியப்பேட்டை வேணுகோபால சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களியப்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயில்
பெயர்
பெயர்:களியப்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:களியப்பேட்டை
மாவட்டம்:செங்கல்பட்டு
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீவேணுகோபால சுவாமி
தாயார்:செண்பகவல்லித் தாயார்

களியப்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயில் களியப்பேட்டையில் அமைந்துள்ள பழைமையான பெருமாள் கோயில். [1]

வரலாறு[தொகு]

விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்.காஞ்சி வரதராஜப் பெருமாள் மீது பக்தி கொண்ட தொட்டையாச்சார் எனும் பக்தர் இங்கு வசித்து வந்ததால் தொட்டையாச்சார்புரம் எனும் பெயரில் புகழ் பெற்றிருந்த ஊர். இவ்வூருக்கு களியப்பேட்டை என்ற பெயர் பின்பு வந்தது.[1]

அன்னிய சுல்தானியர்கள் காலத்தில் மக்கள் ஊரைக் காலி செய்துவிட்டுச் சென்றதிலிருந்து பல நூற்றாண்டுகள் அதிகம் கவனப்பாரின்றி இருந்து பின்னர் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு 11.09.2013 (ஆவணி 26) அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 குமுதம் ஜோதிடம்; 6.9.2013;