கல்யாணி பிரமோத் பாலகிருஷ்ணன்
கல்யாணி பிரமோத் பாலகிருஷ்ணன் | |
---|---|
நாரி சக்தி விருது பெறும் கல்யாணி | |
தேசியம் | இந்தியா |
பணி | ஆடை வடிவமைப்பாளர் |
கல்யாணி பிரமோத் பாலகிருஷ்ணன் (Kalyani Pramod Balakrishnan) தமிழ்நாட்டில் சென்னையைச் சேர்ந்த ஒரு இந்திய ஆடை வடிவமைப்பாளர் ஆவார். இவர் கிராம அபிவிருத்தி அமைச்சாகத்தின் மூலம் நெசவாளர்களுடன் பணியாற்றியுள்ளார். இவர் 2016இல் நாரி சக்தி விருதினைப் பெற்றார்.
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
இவர், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வளர்ந்தார். [1] இவர் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பைப் படித்தார். பின்னர் ஒரு ஆடைகள் விற்பனையகத்தைத் திறந்தார். [2] 1995ஆம் ஆண்டில், இவர் 'அன்றாட வாழ்க்கையில் வாழுதல்' என்று அழைக்கப்படும் ஒரு குவளையை செய்தார். பின்னர் இது அயர்லாந்தில் ஒரு கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. [3]
தொழில்[தொகு]
பாலகிருஷ்ணன் ஆறு ஆண்டுகளில் தமிழகத்தின் பதின்மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 19,500 நெசவாளர்களுடன் கிராம அபிவிருத்தி அமைச்சகத்தில் பணியாற்றினார். பின்னர் இவர் மதியிறுக்கம் அல்லது பெருமூளை வாதம் உள்ளவர்களுக்கு நெசவு கற்றுக்கொள்ள உதவத் தொடங்கினார். [4] இவரது பணிக்கு அங்கீகாரம் அளித்து, 2016 ஆம் ஆண்டு நாரி சக்தி விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியிடமிருந்து பெற்றார். [5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Textile details". CAIN. பார்க்கப்பட்ட நாள் 14 January 2021.
- ↑ "Nari Shakti Puraskar 2016". UPSCSuccess. 10 March 2017. பார்க்கப்பட்ட நாள் 14 January 2021.
- ↑ "Event details". CAIN. பார்க்கப்பட்ட நாள் 14 January 2021.
- ↑ "‘Nari Shakti’ awards for four from state". Gulf Times: p. 24. 13 March 2017 இம் மூலத்தில் இருந்து 28 ஜனவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210128105050/https://www.gulf-times.com/content/pdf/Dailynewspaper/Main2017_3_13486975.PDF.
- ↑ "Four from State receive Nari Shakti awards". The Hindu. 9 March 2017. https://www.thehindu.com/news/cities/chennai/four-from-state-receive-nari-shakti-awards/article17430682.ece.