கலிங்கப்பட்டினம் கடற்கரை
கலிங்கப்பட்டினம் கடற்கரை என்பது ஆந்திர மாநிலம் சிறீகாக்குளம் மாவட்டத்தில் வம்சதாரா ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கடற்கரை சிறீகாகுளம் நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
நிர்வாகம்[தொகு]
ஆந்திரப் பிரதேச மாநில அரசின் ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (APTDC) இந்தக் கடற்கரையை சுற்றுலா மையமாக அங்கீகரித்து இதன் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது.[1]
முக்கியத்துவம்[தொகு]
இதுவொரு பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட துறைமுகம் ஆகும். இங்கு ஒரு கலங்கரை விளக்கமும் உள்ளது. இத்துறைமுகத்தில் வாசனைத் திரவியங்கள், துணிகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இத்துறைமுகம் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சியின் போது மூடப்பட்டது. .[2][3] இந்தக் கடற்கரைக்குச் செல்லும் சாலை கடற்கரைப் படுகை வரை செல்வதால் அது திறந்த சாலைக் கடல் (Open Road Sea) என அழைக்கப்படுகிறது.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kalingapatnam Beach". AP Tourism Portal. Archived from the original on 8 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Beach overview". discoveredindia. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014.
- ↑ "Famous beaches in Andhra Pradesh". indiatemplesinfo. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014.
- ↑ "Tourist-Srikakulam". incredibleap. Archived from the original on 14 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)