கலிங்கப்பட்டினம் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலிங்கப்பட்டினம் கடற்கரை என்பது ஆந்திர மாநிலம் சிறீகாக்குளம் மாவட்டத்தில் வம்சதாரா ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கடற்கரை சிறீகாகுளம் நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

ஆந்திரப் பிரதேச மாநில அரசின் ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (APTDC) இந்தக் கடற்கரையை சுற்றுலா மையமாக அங்கீகரித்து இதன் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது.[1] 

முக்கியத்துவம்[தொகு]

இதுவொரு பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட துறைமுகம் ஆகும். இங்கு ஒரு கலங்கரை விளக்கமும் உள்ளது. இத்துறைமுகத்தில் வாசனைத் திரவியங்கள், துணிகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இத்துறைமுகம் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சியின் போது மூடப்பட்டது. .[2][3]  இந்தக் கடற்கரைக்குச் செல்லும் சாலை கடற்கரைப் படுகை வரை செல்வதால் அது திறந்த சாலைக் கடல் (Open Road Sea)  என அழைக்கப்படுகிறது.[4]

கலிங்கப்பட்டினத்திலுள்ள கலங்கரை விளக்கு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kalingapatnam Beach". AP Tourism Portal. Archived from the original on 8 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Beach overview". discoveredindia. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014.
  3. "Famous beaches in Andhra Pradesh". indiatemplesinfo. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014.
  4. "Tourist-Srikakulam". incredibleap. Archived from the original on 14 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)