கரூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரூர் வட்டம் , தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கரூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் கரூர், வெள்ளியனை மற்றும் தோரணகல்பட்டி என மூன்று உள்வட்டங்களும், 22 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

கரூர் வருவாய் வட்டத்தில் கரூர் ஊராட்சி ஒன்றியம், கரூர் மற்றும் தாந்தோணி என 2 நகராட்சிகளும் மற்றும் புலியூர், உப்பிடமங்கலம் என இரண்டு பேரூராட்சிகளும் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 445,389 ஆகும். அதில் 221,278 ஆண்களும், 224,111 பெண்களும் உள்ளனர். 125,412 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 28.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 81.26% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40514 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 921 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 81,915 மற்றும் 291 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.72%, இசுலாமியர்கள் 2.43%, கிறித்தவர்கள் 1.74% மற்றும் பிறர் 0.0.10% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூர்_வட்டம்&oldid=2957019" இலிருந்து மீள்விக்கப்பட்டது