கரு மருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரு மருது
மருத மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. elliptica
இருசொற் பெயரீடு
Terminalia elliptica
Willd.
மருத மரம், மருதங்காய்
மருதம் பூ

கரு மருது என்பது ஒரு மர வகையாகும். இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது. இம்மரம் 30 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகளைப் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது.[1]

சங்க காலத்தில் மருதம்[தொகு]

சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர்.[2]

மருத மரம் ஆற்றோரங்களிலும் [3] வயலோரங்களிலும் [4] செழித்து வளரும்.

மருத மரத்தில் வெண்மருது [5] கருமருது, பில்லமருது எனப் பல வகைகள் உண்டு. பில்லமருது [6] வீட்டுக்கு நிலை, சன்னல் சட்டங்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.

மரத்தின் உட்புறம் சிவப்பு.[7]
உதிர்ந்த பூவும் சிவப்பு.[8]
மருத மரம் செழுமையான நிழலைத் தரும்.[9][10][11]
உழவர்க்கு நிழல்
நெல்லை விடியலில் போரடித்த உழவர் நண்பகலில் மருதமர நிழலில் எருதுகளுடன் இளைப்பாறுவார்களாம்.[12]
நாகதெய்வக் கோயில்
மருத மரத்தடியில் நாகதெய்வ வழிபாடு நிகழ்ந்தது.[13]
மதுரை
மதுரை என்னும் ஊர்ப்பெயர் மருதத்துறை > மதுரை எனக் கொள்ளும் அளவுக்கு வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி.[14][15][16]
காவிரியாற்று ஆர்க்காடு
அரசன் சேந்தனின் தந்தை அழிசி. அவனது ஊர் ஆர்க்காட்டின் காவிரித் துறையில் மருத மரங்கள் மிகுதி.[17]
மருத வேலி
புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்தின் கடற்கரைப் பகுதிக்கு ‘நெய்லங்கானல்’ என்னும் பெயர் உண்டு. அங்கிருந்த தாமரைப் பொய்கைக்கு கைதைமரம் வேலியாக அமைந்திருந்ததாம். இது மதுரையிலிருந்த தாமரைக் குளத்துக்கு மருதமரம் வேலியாக அமைந்திருந்தது போல அமைந்திருந்த்தாம்.[18]
மருத மாலை
திருபரங்குன்றத்தைத் தொழ வந்த சூரர மகளிர் தலையில் சண்பகப் பூவையும், மார்பில் மருத மர மலர்களை இலைகளோடு சேர்த்துக் கட்டிய மாலையையும் அணிந்திருந்தார்களாம்.[19]

வெளி இணைப்புகள்[தொகு]

பி.எல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டும் மருத மரம் - படம்.

இவற்றையும் காண்க[தொகு]

சங்ககால மலர்கள்
மருத நிலம்
மருதமரம், முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய் அருகே, செம்புக்குடிபட்டி, மதுரை

அடிக்குறிப்பு[தொகு]

  1. Germplasm Resources Information Network: Terminalia elliptica பரணிடப்பட்டது 2012-06-09 at the வந்தவழி இயந்திரம்
  2. அகநானூறு 36
  3. ஐங்குறுநூறு 33
  4. கழனி மருது - ஐங்குறுநூறு 70
  5. நெடுவெண் மருது - அகநானூறு 226,
  6. (இடையிடையே செந்நிறக் கோடுகளை உடைய பில்லநிற மருது)
  7. முடக்காஞ்சி, செம்மருது - பொருநராற்றுப்படை 189
  8. செவ்வி மருதின் செம்மல் - குறுந்தொகை 50
  9. சேண்சினை இருள்புனை மருதின் இன்னிழல் - நற்றிணை 330
  10. மருது இமிழ்ந்து (தழைத்து) ஓங்கிய நளியிரும் பரப்பு - பதிற்றுப்பத்து 23-18
  11. ஒலி தெங்கின் இமிழ் மருதின் - பதிற்றுப்பத்து 13-7
  12. அகநானூறு 37
  13. பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் பலிபெறு வியன்களம் - பெரும்பாணாற்றுப்படை 232
  14. திருமருத முன்றுறை - பரிபாடல் 7-83
  15. வையைத் திருமருத முன்றுறை - பரிபாடல் 22-45
  16. வையை மருதோங்கு முன்றுறை – சிலப்பதிகாரம் 14-72
  17. குறுந்தொகை 258
  18. மருதவேலி - சிலப்பதிகாரம் 6-140
  19. கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் - திருமுருகாற்றுப்படை 28
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மருதம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரு_மருது&oldid=3238499" இலிருந்து மீள்விக்கப்பட்டது