கருப்பசாமி

கருப்பசாமி ஒரு கிராமக் காவல் தெய்வமாவார். இவரைக் கருப்புசாமி என்றும், கருப்பன் என்றும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பொதுவாகப் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக இவர் உள்ளார். இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டுக் கிராமங்களில் பரவலாக காணப்படுகின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு.

உருவம்[தொகு]

நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார்.[1]

மலையாளிகளைப் போல ஒருபக்கம் சாய்ந்த கொண்டையை வைத்துள்ளார். வைணவ சமயத்தின் பெருமாளாகச் சிறுதெய்வ வழிபாட்டில் கொண்டாடப்படுகிறார். சில சிறுதெய்வக் கோயில்களில் கிருஷ்ணரின் உருவ அமைப்போடு உள்ளார். வைரிசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் காேவிலில் முத்துக் கருப்பண்ணசாமி புல்லாங்குழலை வாசித்தவாறும், அதன் இசையில் புலிகள், மாடுகள், கன்றுகள் மயங்கி இருப்பது போலவும் சன்னதி உள்ளது.
சங்கிலிக் கருப்புசாமி மிகவும் உக்கிரம் கொண்டவராகவும், அவரை அடக்கப் பல்வேறு யாகங்களும், பலிகளும் இட்டுச் சங்கிலியால் பிணைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். தடித்த சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கருப்புசாமி உள்ளார்.
நம்பிக்கை[தொகு]
கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம். இவை இந்தத் தெய்வத்தை அழைக்கும் பெயர்கள். 'காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்குக் குதிக்காலின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் பழக்கம் இருந்து வந்தது. இந்த வழக்கில் 'கருப்பு' என்னும் சொல் பேயை உணர்த்தும். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும் பொருள்களும் உண்டு. கருப்புசாமி என்னும் பெயர் கருப்பசாமி எனவும் வழங்கபடுகின்றது.[2]
கோயில்[தொகு]
தமிழ்நாட்டுக் காவல் தெய்வங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முக்கிய தெய்வமாகக் கருப்புசாமி அருள்பாலித்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராமக் கோயில்களே இல்லை எனக் கூறும் அளவிற்கு இந்தக் கடவுள் தமிழரின் வாழ்வில் ஒன்றியுள்ளார்.
விளைநிலங்களில்[தொகு]
விளைநிலங்களின் காவல் தெய்வமாக நாட்டுப்புற மக்கள் கருப்பனாரை வழிபடுகின்றனர். விளைநிலத்தின் ஒரு பகுதியில் மரத்தடியில் நடப்பட்ட கல்லை கருப்பனாராகக் கருதி ஆண்டுக்கொருமுறை சேவலைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.
கருப்புசாமிக்கு பிற பெயர்கள்[தொகு]
108 கருப்புசாமிகள் உள்ளதாகவும், 1008 கருப்புசாமிகள் உள்ளதாகவும் நாட்டார் தெய்வங்களை வழிபடும் மக்கள் நம்புகின்றனர். பெரும்பாலான இடங்களில் கருப்புசாமிக்கு உருவம் இல்லாமல் பதிவு வைத்து வழிபடுகின்றனர். அத்தகைய இடங்களில் பெயரே முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக உள்ளது. இத்தனை வகையான கருப்பு சாமிகளுள் சிலவற்றுக்கு மட்டுமே உருவங்கள் கொடுக்கப்பட்டு வரையரை செய்யப்பட்டுள்ளன. 108 கருப்புசாமிக்கும் மூத்தவர் கொல்லிமலையில் குடிகொண்டிருக்கும் பெரியசாமி என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
- வாத்தியார் தோட்டத்து கருப்பசாமி[3]
- குள்ளக்கருப்பன் சாமி (கள்ளக்குறிச்சி)
- சங்கிலி கருப்பன்
- காங்கேயம் சுண்டுவிரல் கருப்பசாமி
- ஆலடி கருப்பசாமி
- சிறுவனூர் (பெரியகருப்பு, சின்னக்கருப்பு)
- மார்நாடு கருப்பசாமி ( சின்னப்பேராலி, விருதுநகர் )
- முப்புலி கருப்பர்
- கருப்பனார் சாமி
- குல கருப்பனார்
- கருப்பனார்
- பதினெட்டாம்படியன் (மதுரை அழகர் கோயிலில் உள்ள கருப்பசாமி சன்னதிக்கு பதினெட்டு படிகள் இருப்பதால்)[4]
- சின்ன கருப்பசாமி
- மலையாளம் சுவாமி
- பெரிய கருப்பசாமி
- மளுவேந்தி கருப்பணசாமி
- மீனமலை கருப்பசாமி
- முன்னோடை கருப்பசாமி
- நொண்டி கருப்பசாமி
- ஒண்டி கருப்பசாமி
- கொம்படி கருப்பண்ணசாமி (வாடிப்பட்டி ஸ்ரீ கருப்பசாமி)
- கோட்டை வாசல் கருப்பசாமி
- அச்சன்கோவில் கருப்பசாமி.
- மடை கருப்பசாமிமாவட்டம்ளம்
- ஆகாச கருப்பு
- தலத்துக்கருப்பசாமி.மேலநம்பிபுரம். விளாத்திகுளம். தூத்துக்குடி மாவட்டம்
- பெரிய ஆலங்குளம் சந்தனக்கருப்பசாமி
- வில்வமரத்து கருப்பராயம் சுவாமி, நம்பியூர், ஈரோடு மாவட்டம்,
- பொந்துபுளி கருப்பசாமி, மதுரை மாவட்டம்
- வண்ண கருப்பசாமி,விருப்பாச்சி
- சோனைகருப்பசாமி மதுரை மாவட்டம்
- கோட்டைமலை கருப்பசாமி புளியங்குடி தென்காசி மாவட்டம்
- கிளிக்கூண்டு கருப்பசாமி வானரமுட்டி தூத்துக்குடி மாவட்டம்
- அருள்மிகு விநாயகபுரம் கருப்பசாமி சித்தர்பீடம் கடலூர்.
- ஆவியூர் மார்நாட்டு கருப்பசாமி
- ஆவியூர் நொன்டிகருப்பசாமி முத்துகருப்பசாமி
- ஆவியூர் ரெட்டகருப்பசாமி
- மாங்குளம் மார்நாடு கருப்பசாமி
- மதலைக்கருப்பு (கங்கைகொண்டான், பரமக்குடி). *கொல்லிமலை மாசிகருப்பு .
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ":: TVU ::". http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=130.
- ↑ கறுப்பு = சினம் - 'கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள' - தொல்காப்பியம் உரியியல். கருப்பு = கருமைநிறம்
- ↑ https://vathiyarthottathukarupparayarr.business.site/?m=true
- ↑ https://www.vikatan.com/spiritual/temples/madurai-the-history-and-the-glorious-significance-of-pathinettampadi-karuppu-temple