கரண் சிங் தன்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரண் சிங் தன்வர் (Karan Singh Tanwar) இந்தியாவிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைவராவார். தில்லி பல்கலைக்கழகத்தின் மோதிலால் நேரு கல்லூரியில் கணிதத்தில் பட்டப்படிப்பை முடித்த தன்வர் ஒரு தொழிலதிபராக உயர்ந்தார்.

தில்லியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1975-77ல் ஆம் ஆண்டு காலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஆட்சி நடந்தபோது கரண் சிங் தன்வர் 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். வடக்கு தில்லி நகராட்சி ஆணையத்தின் துணைப் பொறுப்பு அதிகாரியாகவும் இவர் இருந்தார்.[1]

கரண் சிங் தன்வர் தில்லி இராணுவமுகாம் தொகுதியில் போட்டியிட்டு தில்லி சட்டமன்ற உறுப்பினராக 1933-1938, 2003-2008, 2008-2013 ஆண்டுகள் காலத்தில் மூன்று முறை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அம் ஆத்மி கட்சி வேட்பாளரான சுரேந்தர் சிங்கிடம் தோற்றுப் போனார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-05. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரண்_சிங்_தன்வர்&oldid=3548004" இலிருந்து மீள்விக்கப்பட்டது