கரசூர் பத்மபாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரசூர் பத்மபாரதி (பிறப்பு: சூலை 15, 1975) என்பவர் ஒரு புதுச்சேரி எழுத்தாளர். இவரது இயற் பெயர் கு. பத்மாவதி. தமிழில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், இளங்கலைக் கல்வியியல் பட்டங்களையும், மானிடவியலில் பட்டயமும் பெற்றவர். இளமை நதியில் முதுமை ஓடங்கள், சிறகிருந்தும் என்கிற நூல்களை வெளியிட்டவர். கவியரங்குகள், பட்டிமன்றங்களில் பங்கு பெற்றவர். இவர் எழுதிய "நரிக்குறவர் இன வரைவியல்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. தமிழ்விக்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான பெரியசாமி தூரன் விருது கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்பட்டது

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரசூர்_பத்மபாரதி&oldid=3614072" இலிருந்து மீள்விக்கப்பட்டது