கயிலைக் கலம்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கயிலைக் கலம்பகம் [1] என்னும் நூல் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரரால் பாடப்பட்டது. கயிலை என்பதுஸ்ரீவைகுண்டம் [2] என்னும் ஊரின் பகுதியாக விளங்கும் கயிலாசபுரம் என்னும் ஊர்ப்பகுதி. இங்குக் கற்கோயில் ஒன்று உள்ளது. இங்குள்ள இறைவன் பெயர் கயிலாயநாதர். இறைவி பெயர் திரிபுரசுந்தரி. இது குமரகுருபரர் பிறந்த ஊர். குமரகுருபரர் தம் இளமைக் காலத்தில் இதனைப் பாடினார். இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. எட்டுப் பாடல்கள் மட்டுமே கிடைக்கப்பெற்று அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் பாடல்களின் நடையைப் பார்க்கும்போது இது குமரகுருபரரால் பாடப்பட்டதாகத் தோன்றவில்லை என்பது மு. அருணாசலம் குறிப்பு.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 72. 
  2. நம்மாழ்வார் குறிப்பிடும் நவத்திருப்பதிகளில் ஒன்று
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயிலைக்_கலம்பகம்&oldid=3304404" இலிருந்து மீள்விக்கப்பட்டது