கம்மாளம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்மாளம்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636903

கம்மாளம்பட்டி (Kammalampatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது எல்லபுடையாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த கிராமம் மாவட்ட தலைமையகமான தர்மபுரியில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] மேலும் இக்கிராமம் கடல் மட்டத்திலிருந்து 347 மீடடர் (1138 அடி) உயரத்தில் உள்ளது. இக்கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பு 214.71 ஹெக்டேர் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1301 .இந்த கிராமத்தில் 341 வீடுகள் உள்ளன. 

சிறப்பு திருவிழாக்கள் [தொகு]

ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மன்னாம்பன் கோயிலில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு  ஆண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் பங்குனி உத்திர திருவிழா மிகப்பிரபலமாக நடைபெறும்.

அருகில் உள்ள முக்கியமான இடங்கள்[தொகு]

  • தீ்ரத்தமலை - 11கி.மீ (6.8 மைல்)
  • வள்ளிமதுரை அணை - 5 கி.மீ
  • சித்தேரிமலை - 21 கி.மீ (13 மைல்)
  •  திருவண்ணாமலை - 55 கி.மீ 
  • மனவாளன் கோவில் - 2 கி.மீ 
  • அனுமந்தீர்த்தம் - 15 கி.மீ
  • அம்மன்கருங்கல் - 3 கி.மீ 

போக்குவரத்து[தொகு]

கம்மாளம்பட்டியிலிருந்து 15 கி.மீ தொலைவில் மொரப்பூர்  இரயில் நிலையம் உள்ளது. 

சுரங்கம்[தொகு]

கருங்கல்[தொகு]

கம்மாளம்பட்டி அருகிலுள்ள அம்மன் கருங்கல் உயர்தரமாக இருப்பதால் வட அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்மாளம்பட்டி&oldid=3603769" இலிருந்து மீள்விக்கப்பட்டது