உள்ளடக்கத்துக்குச் செல்

கமலா பாசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமலா பாசின்
2017 இல் டாக்காவில் கமலா பாசின்
2017 இல் டாக்காவில் கமலா பாசின்
பிறப்புகமலா பாசின்
(1946-04-24)24 ஏப்ரல் 1946
சகீதன்வாலி, பஞ்சாப், இந்தியா
(இன்றைய பஞ்சாப் (பாக்கிஸ்தான்))[1]
இறப்பு25 செப்டம்பர் 2021(2021-09-25) (அகவை 75)
தில்லி, இந்தியா
தொழில்பெண்ணிய செயற்பாட்டாளர், கவிஞர், எழுத்தாளர்
மொழிஇந்தி, ஆங்கிலம்
தேசியம்இந்தியா
கல்விமுதுகலை
கல்வி நிலையம்இராஜஸ்தான் பல்கலைக்கழகம், மியூன்ஸ்டர் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Borders & Boundaries: Women in India's Partition (book)

கமலா பாசின் (Kamla Bhasin, 24 ஏப்ரல் 1946 – 25 செப்டம்பர் 2021) ஒரு இந்திய பெண்ணிய ஆர்வலர் ஆவார். இந்தியா புதுடில்லியில் வாழ்ந்தவர். கவிஞர், எழுத்தாளர், சமூக அறிவியலாளர் என பல்துறைகளில் இயங்கினார். இவரது பணி 1970 இல் தொடங்கியது. பாலினசமத்துவம், கல்வி, மனித வளர்ச்சி, ஊடகம் என பன்மைத்துவத்துவத்தை மையமாகக் கொண்டு அது அமைந்திருந்தது. [2] சங்கத் என்ற தெற்காசிய பெண்ணிய நெட்வர்க் அமைப்பை நிறுவி பாலின சமத்துவத்துக்கு பாடுபட்டவர். இவர் எழுதிய க்யுங்கி மெயின் லட்கி ஹூன், முஜே பத்னா ஹை என்ற கவிதைக்கள் மிகவும் புகழ் பெற்றவை. [3] 1995 ஆம் ஆண்டில், பிரபல கவிதையான ஆசாதி (சுதந்திரம்) என்ற படைப்பை ஒரு மாநாட்டில் வாசித்தார். இவர் நூறு கோடியினர் கிளர்ச்சி என்ற அமைப்பின் தெற்காசிய ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

இவர் தன்னை 'தி மிட்நைட் ஜெனரேஷன்' என்ற அடைமொழியுடன் அழைத்துக் கொண்டார். இது சுதந்திரத்தின் போது பிறந்த இந்திய தலைமுறையை குறிப்பதாக உள்ளது. இவரது தந்தை ராஜஸ்தானில் மருத்துவராக இருந்தார். அந்த குடும்பத்தில் ஆறு குழந்தைகளில் நான்காவதாக பிறந்தார். வளரும் போது இந்தியாவில் பல கிராமங்களைச் சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. இது இந்திய கிராமங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புரிந்து கொள்ள உதவியது. அந்த அனுபவம் எதிர்கால வாழ்க்கையை திட்டமிடுவதில் கருவியாக உதவியது. இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை அரசு பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

இவர் சேவா மந்திரில் பணிபுரிந்த போது ராஜஸ்தானில் கணவரை சந்தித்தார். அவர் ஆச்சரியமான பெண்ணிய மனிதர் மற்றும் முற்போக்கான கருத்துக்களை ஆதரித்தவர் என்று பின்னாளில் விவரித்தார். இவரது கணவர் தங்கள் பிள்ளைகளின் பெயருக்குப் பின் பெற்றோரின் முதலெழுத்துகளை சேர்த்தார். மேலும் பாசினின் 70 வயதான தாயாருக்கு ஆதரவாகவும் இருந்தார். இப்படி இருந்தவர், பிற்காலத்தில் வன்முறையை பிரயோகிக்கவும், வேரொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளவும் துவங்கினார். மோசமான அவரது செயல்பாடுகளால் இவர்களின் வாழ்கையில் பிரிவு உண்டானது. அது மண முறிவை ஏற்படுத்தியது.

கல்வி, தொழில்

[தொகு]

அரசியல்மயமாக்கல்

[தொகு]

பாசின் இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் படித்தார். மேற்கு ஜெர்மனி மியூன்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்தார். பின்னர், பேட் ஹொன்னெப்பில் வளரும் நாடுகளுக்கான ஜெர்மன் அறக்கட்டளையின் சார்புநிலை மையத்தில் ஒரு ஆண்டு கற்பித்தல் பணியை மேற்கொண்டார். [4] பின் இந்தியாவுக்குத் திரும்பி, அங்கு கற்றவற்றை செயல்படுத்த திட்டமிட்டார். ராஜஸ்தானில் செயல்படும் சேவா மந்திர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இந்திய சமுதாயத்தில் சாதி எவ்வாறு சமூக நோயாக உள்ளது என்பதை கண்டார். ஆட்சியில் கூட சாதி பாகுபாடு எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் கற்றுக்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் அகழ்வதற்கு அரசு நிதி பயன்படுவதால் பிராமணர்களின் கிணறுகள் ஒருபோதும் வறண்டுவிடுவதில்லை என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தார். சாதியும் பெண்ணியமும் குறுக்குவெட்டாக இருப்பதை அறிந்து செயல்பட்டார்.

ஐ.நா.வில் பணியாற்றிய அவர் சங்கத் அமைப்பில் பணியாற்றுவதற்காக, 2002 ஆம் ஆண்டில் வேலையை ராஜினாமா செய்தார். சங்கத் நிறுவன உறுப்பினர் மற்றும் ஆலோசகராக பணியாற்றினார். [5] பெண்ணியக் கோட்பாட்டையும் சமூக செயல்பாட்டையும் இணைக்கும் வகையில் இவரது பணிகள் அமைந்திருந்தன. பழங்குடி மற்றும் உழைக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கு பணிகளை முன்னெடுத்தார். குறைந்த கல்வியறிவு விகிதத்தில் மிகவும் பின்தங்கியிருந்த சமூகத்தினருடன் நெருங்கி பணிகள் செய்தார். இதற்காக சுவரொட்டி, நாடகம், பிற எழுத்தறிவு அற்ற தொடர்பியல் முறைகளைப் பயன்படுத்தினார். பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், கோரிக்கை முழக்கமிடுதல், சமூகத்தை அணிதிரட்டல் என்ற செயல்பாடுகளை புரிந்து கொண்டார். [4]

படைப்புகள்

[தொகு]

ஆணாதிக்கம், பாலின பாகுபாட்டைப் புரிந்துகொள்வது பற்றி புத்தகங்கள், சிறு பிரசுரங்களை எழுதியுள்ளார். இவை 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாலின சிக்கல்களை மக்கள் புரிந்துகொள்வதற்கு உதவியாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவற்றை பயன்படுத்துகின்றன. பிந்தியா தாப்பர் என்பவருடன் இணைந்து இவர் எழுதிய சிரிக்கும் விஷயங்கள் என்ற புத்தகம் 2005 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளியானது. இதன் மறுபதிப்பு 2013 இல் வெளியிடப்பட்டது. இதன் இந்தி மொழி பதிப்பு ஹஸ்னா தோ சங்கர்ஷோ மேன் பீ ஸாரூரி ஹை எனற தலைப்பில் வெளியாகியுள்ளது. இவரின் முக்கியமான ஆக்கங்கள் பின்வருமாறு: எல்லைகள் மற்றும் வரம்புகள், இந்தியப் பிரிவினையில் பெண்கள், [6] பாலினப் பாகுபாட்டைப் புரிந்துகொள்வது, [7] ஆணாதிக்கம் என்றால் என்ன? போன்றவை ஆகும். [5] புது தில்லியில் 2013 ஆம் ஆண்டு நடந்த நூறு கோடியினர் கிளர்ச்சி என்ற நிகழ்வில், தனது புகழ்பெற்ற ஆசாதி கவிதையை வாசித்து மிகுந்த பாராட்டுதலைப் பெற்றார். தமிழில் இவரது படைப்புகளில் ஒன்று, யாரேனும் இந்த மெளனதை்தைத் தகர்த்திருந்தால்... என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை எழுத்தாளர் சாலை செல்வம் மொழி பெயர்த்துள்ளார். ெஹர் ஸ்டோரீஸ் என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Let's change the world: Kamla Bhasin". The Dawn. 29 July 2005. Retrieved 25 September 2021.
  2. Shifa, Nazneen. ""The Womens Movement is a larger thing" - Interview with Kamla Bhasin". South Asia Citizens Web. Retrieved 7 December 2013.
  3. "Men are not biologically violent". 28 April 2016. Archived from the original on 2016-10-18. Retrieved 2016-10-18.
  4. 4.0 4.1 "Kamla Bhasin on why 'azadi' was never Kashmir's alone". www.dailyo.in. Retrieved 2016-10-18.
  5. 5.0 5.1 "Capitalist patriarchy – the new enemy". http://www.thedailystar.net/op-ed/capitalist-patriarchy-%E2%80%93-the-new-enemy-1216576. பார்த்த நாள்: 2016-10-18. 
  6. Menon, Ritu (1998-01-01). Borders & Boundaries: Women in India's Partition.
  7. "Understanding Gender (Kali Monographs)". Goodreads. Retrieved 2017-02-25.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கமலா பாசின்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_பாசின்&oldid=4271333" இலிருந்து மீள்விக்கப்பட்டது