கண்டோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டோர் அகத்திணை மாந்தர்களில் வாயில்களாக வருபவர். [1] தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிந்த இடத்து வழியில் பார்த்தவர்கள் இந்தக் கண்டோர். சென்றுவந்தவர்கள், எதிர் வந்தவர்கள் எனக் கண்டோர் பலர் ஆதலின் இந்த வாயில்-மாந்தர் பன்மையால் கூறப்பட்டுள்ளனர்.

  • தலைவனும் தலைவியும் செல்லும் வழியும், காலமும், நலமாக உள்ளன எனத் தாயைத் தேற்றுவர். தலைவன் ஊரை நெருங்கிவிட்டனர் என்பர். தலைவன் தலைவியருக்கு நல்லன கூறுவர். தாயின் கவலை பற்றிக் கூறித் தடுப்பதும் உண்டு. – இவை இவர்களின் பங்கு. [2]
  • நற்றாய் தன் மகளைப் பார்த்தீர்களா என இவர்களிடம் புலம்புவாள். [3]
  • தோழி கண்டோர் சொன்னதாகத் தாயைத் தேற்றுவாள். [4]

நற்றிணை 2, குறுந்தொகை 7, ஐங்குறுநூறு 188 முதலான பாடல்களைக் கண்டோர் கூற்றுக்கு எடுத்துக்காட்டுகளாக உரையாசிரியர் இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார்.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. தொல்காப்பியம் கற்பியல் 52.
  2. தொல்காப்பியம் அகத்திணையியல் 43
  3. தொல்காப்பியம் அகத்திணையில் 39
  4. தொல்காப்பியம் அகத்திணையில் 42

காண்க[தொகு]

தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டோர்&oldid=3286047" இலிருந்து மீள்விக்கப்பட்டது