கண்டதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திலுள்ள ஒர் ஊர் கண்டதேவி.

சிவன் கோயில்[தொகு]

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் இங்கு அமைந்துள்ளது.

கண்டதேவி சிவன் கோயில்

இக்கோயில் இறைவன் சொர்ணமூர்த்தி எனவும் இறைவி பெரியநாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

செம்பராங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோயிலை 19ஆம் நூற்றாண்டில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கற்றளியாக விரிவு படுத்தி அணியொட்டியக்கால் மண்டபம், திருச்சுற்று, முகப்பு மண்டபம், ராஜ கோபுரம் அமைத்து நந்தன வருடம் வைகாசி மாதம்(1892) குடமுழுக்கு செய்துள்ளனர். பின்னர் 01.02.1929இல் இரண்டாவது குடமுழுக்கு செய்துள்ளனர்.[1]

குளம்[தொகு]

இவ்வூரின் நடுவே மிகப் பெரிய குளம் ஒன்று அமைந்துள்ளது. இக்குளம் கண்டதேவி ஊருணி என அழைக்கப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில், அமராவதிபுதூர் வயிநாகரம் முத்தையா செட்டியார் இவ்வூர் சிவாலய திருப்பணி செய்த போது இக்குளத்தை அமைத்துள்ளார்.[1]

தேர்[தொகு]

இங்குள்ள சொர்ணமூர்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறும். ஆனால் தேரோட்டத்தின்போது தாழ்த்தப்பட்ட மக்கள் தேரை இழுக்க அனுமதிக்கப்படாததால் இங்கு பெரும் பிரச்சனை வெடித்தது. கடந்த 1998ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை மற்றும் 2003ம் ஆண்டும் தேரோட்டம் நடைபெறவில்லை.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் பெரும் முயற்சியால் 2002, 2004, 2005, 2006 ஆகிய ஆண்டுகள் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து கோவில் திருப்பணி காரணமாக தேரோட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. திருப்பணிகள் முடிந்தும் தற்போது வரை தேரோட்டம் நடைபெறவில்லை.[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 மு.கதிரேசன் செட்டியார் (1953). நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு. https://archive.org/details/Acc.No.26594NattukottaoNagaratharVaralaru1953. 
  2. "கண்டதேவி கோவில் தேரோட்டம் ரத்து". ONE INDIA TAMIL. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டதேவி&oldid=3581494" இலிருந்து மீள்விக்கப்பட்டது