கட்டக்கயம் செரியன் மாப்பிள்ளை
கட்டக்கயம் செரியன் மாப்பிள்ளை | |
---|---|
பிறப்பு | பாளா, கோட்டயம், கேரளம், இந்தியம் | 24 பெப்ரவரி 1859
இறப்பு | 29 நவம்பர் 1936 | (அகவை 77)
தொழில் | கவிஞர், எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சிறீ ஏசு காவியம், மார்தோமவிஜயம், வனிதாமணி |
துணைவர் | மரியம்மாள் |
குடும்பத்தினர் | உலகண்ணன் (தந்தை), சிசிலி (தாயார்) |

கட்டக்கயம் செரியன் மாப்பிள்ளை (Kattakayam Cherian Mappillai) (1859-1936) ஓர் இந்திய கவிஞரும் மலையாள இலக்கியத்தின் நாடக ஆசிரியருமாவார். மகாகவி என்ற பட்டத்தை பெற்ற இவர் "சிறீ இயேசு விஜயம்" என்ற காவியத்திற்கு பெயர் பெற்றவர். மலையாள மொழியில் ஆரம்பகால இலக்கிய இதழ்களில் ஒன்றான விஞ்ஞானாணா ரத்னாகரத்தின் நிறுவனர் ஆசிரியராக இருந்தார். பன்னிரெண்டாம் போப் இவருக்கு 1931-இல் தங்கப் பதக்கத்தை வழங்கினார்.
சுயசரிதை
[தொகு]இவர் 1859 பிப்ரவரி 24, அன்று தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாளா என்ற இடத்தில் ஒரு கிறித்துவக் குடும்பத்தில் உலகண்ணன், சிசிலி ஆகியோருக்கு பிறந்தார்.[1] இவர் ஞாவக்குட்டு தாமோதரன் கர்த்தா என்பவரிடம் சமசுகிருதத்தைக் கற்றார். அந்த சமய்த்தில் இவர் ஏற்கனவே கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவரது ஆரம்பக் கவிதைகள் 1887 ஆம் ஆண்டில் நசுரானி தீபிகா என்ற இதழில் வெளியிடப்பட்டன. தினசரி நிறுவனர் கண்டத்தில் வர்கீசு மாப்பிள்ளையின் ஊக்குவிப்பால் 1980-ஆம் ஆண்டில் மலையாள மனோரமாவில் ஒரு கவிதை கட்டுரையைத் தொடங்கினார். பின்னர், இவர் பல கவிதைகளையும் நாடகங்களையும் எழுதினார்.[2] அவற்றில் மிகவும் அறியப்பட்ட "சிறீ இயேசு விஜயம்",[3] என்பதில் விவிலியத்தில் 24 கான்டோக்களில் ஒரு மகாகாவ்யம்,[4] ஆதியாகமம் புத்தகத்திலிருந்து புதிய ஏற்பாடு வரை விவரிக்கிறார்.[5][6] இது ஒரு கிறிஸ்தவ எழுத்தாளரின் முதல் மலையாள மொழி காவியமாகும்.[7]
இவர் தொழில் ரீதியாக ஒரு இரப்பர் விவசாயியாவார். கேரளாவின் ஆரம்பகால இரப்பர் தொழிற்சாலைகளில் ஒன்றான மீனச்சில் இரப்பர் தொழிற்சாலை என்ற பெயரில் இணைந்து நிறுவினார்.[5] ஜே. தாமஸ் காயலககோம் 1913 இல் விஞ்ஞானாணா ரத்னாகரத்தை நிறுவியபோது, இவர் அதன் நிறுவனர் ஆசிரியராகப் பணியாற்றினார். கடகச்சிற வீட்டைச் சேர்ந்த மரியம்மாவை மணந்த இவர் 1936 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி 77 வயதில் இறந்தார் [1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-03-06. Archived from the original on 2019-03-06. Retrieved 2019-03-06.
- ↑ "List of works". Kerala Sahitya Akademi portal. 2019-03-07. Archived from the original on 2019-03-08. Retrieved 2019-03-07.
- ↑ "`Statement" (PDF). Archived from the original (PDF) on 3 June 2012. Retrieved 27 April 2011.
- ↑ Encyclopaedia of Indian Literature: A-Devo.
- ↑ 5.0 5.1 "Kattakayam Cherian Mappillai - Veethi profile". veethi.com. 2019-03-06. Retrieved 2019-03-06.
- ↑ Knit India Through Literature Volume 1 - The South. 5 March 2017.
- ↑ "Chavara Kuriakose Elias and his Contribution to Literature". Department of Tourism, Government of Kerala (in ஆங்கிலம்). 2019-03-07. Retrieved 2019-03-07.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Portrait commissioned by Kerala Sahitya Akademi". Kerala Sahitya Akademi. 2019-03-06. Archived from the original on 2019-03-06. Retrieved 2019-03-06.
- Jyothibai Pariyadath (2012-11-08). "Sreeyesucharitham Kattakkayathil - Cheriyan Mappila". YouTube. Retrieved 2019-03-06.
- Jyothibai Pariyadath (2012-11-08). "Sree Yesu Vijayam - Kattakkayathil Cheriyan Mappila". YouTube. Retrieved 2019-03-07.
- "List of Syrian Malabar Nasranis who made significant contributions". nazaranepuremallu.blogspot.com. 2019-03-07. Retrieved 2019-03-07.