கடைநிலை விடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் கடைநிலை விடை என்பது ஒன்று. இது பாடாண் திணையின் துறை. புறநானூற்றில் இத்துறைப் பாடல் ஒன்றே ஒன்று உள்ளது.

இலக்கண நூல் விளக்கம்[தொகு]

  • புறப்பொருள் வெண்பாமாலை பாடாண் திணையின் 48 துறைகளில் இது குறிப்பிடப்படவில்லை. பரிசில் விடை துறையின் மற்றொரு பகுதி போலும். புறநானூற்றுப் பாடல் பகுப்பு இதனை விளக்கும் வகையில் இரு துறைகளாகவும் கொள்ளலாம் எனக் குறிப்பிடுகிறது.
  • தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இரண்டு இலக்கண நூல்களிலும் குறிப்பிடப்படாத இந்தத் துறை புறநானூற்றுத் திணை, துறை பகுப்புக்களுக்கு மூலமான, மறைந்துபோன பன்னிரு படலம் நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது போலும்.

இலக்கியம்[தொகு]

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் நல்கிய பரிசுடன் மீளும் புலவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் கடல் வற்றிப்போனால் என்ன? கதிரவன் தெற்கில் தோன்றினால் என்ன? சோழன் நிழல் எனக்கு இருக்கிறது – எனப் பெருமித்த்தோடு பாடுகிறார். எனவே இது ‘கடைநிலை விடை’ என்னும் துறையாகும். ‘வைகறை அரவம் கேளியர்! பலகோள் செய்தார் மார்ப! எழுமதி துயில்’ என தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி நெடுங்கடைத் தோன்றியேனே – நல்கியோனே. [1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 397
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடைநிலை_விடை&oldid=1206051" இலிருந்து மீள்விக்கப்பட்டது