கடைத்தெருவின் கலைஞன் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடைத்தெருவின் கலைஞன் ஆ. மாதவனைப் பற்றி ஜெயமோகன் எழுதிய நூல்.விஷ்ணுபுரம் இலக்கிய விருதின் ஒரு பகுதியாக தமிழினி பதிப்பகத்தால் 2010 திசம்பரில் வெளியிடப்பட்டது. மூத்த தமிழ் எழுத்தாளர்களுக்கு இளையோரால் அளிக்கப்படும் விருது இது. இந்நூலில் மாதவனைப்பற்றிய இரு நீண்ட திறனாய்வுக் கட்டுரைகளும் மாதவனைப்பற்றிய ஜெயமோகனின் அனுபவக்குறிப்பும் மாதவனுடன் நீண்டபேட்டியும் உள்ளது. பேட்டியில் மாதவன் தன்னுடைய வாழ்க்கையைப்பற்றி மிக விரிவாகப் பேசுகிறார். எம். வேதசகாய குமார் முன்னுரை எழுதியிருக்கிறார்.