கடம்பர் உலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடம்பர் உலா அல்லது கடம்பர் கோயில் உலா என்பது குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில் இறைவன் கடம்பவனநாதரை நாயகனாக கொண்டு எழுதப்பட்ட உலாவாகும். [1] இந்நூலை உ.வே.சாமிநாத ஐயர் கிபி 1932 -ல் கடம்பர் கோயில் உலா என்ற பெயரில் பதிப்பித்துள்ளார். [2]

பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,பேரிளம்பெண் என இறைவனை ஏழு பெண் பருவங்களாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலை எழுதியவர் பெயர் அறியப்படவில்லை. எனினும் இந்நூலில் உள்ள "திருவா வடுதுறையி, லெம்பிரா னன்ப ரிதயமோ" எனும் குறிப்பால் திருவாவடுதுறை ஆதினத்தினைச் சார்ந்தவர் என்று அறிகிறோம்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "சைவம் ஆர்க் கடம்பர் உலா". Archived from the original on 2016-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
  2. தினமணி உ.வே.சா. பதிப்புகள் நாள் சூலை 20, 2014

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடம்பர்_உலா&oldid=3547467" இலிருந்து மீள்விக்கப்பட்டது