உள்ளடக்கத்துக்குச் செல்

ஔரங்கசீப் கல்லறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஔரங்கசீப்பின் கல்லறை
ஔரங்கசீப் கல்லறையின் உட்புறம்
Map
பொதுவான தகவல்கள்
வகைகல்ல்றை
கட்டிடக்கலை பாணிமுகலாயக் கட்டிடக்கலை
இடம்குல்தாபாத், சத்திரபதி சம்பாஜி நகர், மகாராட்டிரம், இந்தியா
ஆள்கூற்று20°0′18.13″N 75°11′29.04″E / 20.0050361°N 75.1914000°E / 20.0050361; 75.1914000
கட்டுமான ஆரம்பம்4 மார்ச் 1707
நிறைவுற்றது1707
திறக்கப்பட்டது1707
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக் கலைஞர்(கள்)முகமது ஆசம் ஷா
ஔரங்கசீப்பின் கல்லறையின் வெளிப்புறம்

ஔரங்கசீப் கல்லறை (Tomb of Aurangzeb[1]), இந்தியாவை ஆண்ட முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை, மகாராட்டிரம் மாநிலத்தின் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சத்திரபதி சம்பாஜி நகருக்கு வடகிழக்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குல்தாபாத் எனும் சிற்றூரில், மறைந்த சூபி அறிஞர் சேக் ஜெயினுதீன் சிராசி[2] தர்கா வளாகத்தில் உள்ளது.

பின்னணி

[தொகு]

தக்காண பீடபூமி பகுதியில் படைகளுடன் பாசறையில் தங்கியிருந்த முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் (3 நவம்பர்1618 – 3 மார்ச் 1707) உடல் நலிவு காரணமாக தனது 89வது அகவையில் இயற்கை எய்தினார். ஔரங்கசீப் எழுதிய உயிலில் தனது கல்லறையை மிகவும் எளிமையாக கட்டப்பட வேண்டும் எழுதி வைத்திருந்தார். அதன்படி அவரது உடலை, அவரது மூத்த மகன் முகமது ஆசம் ஷா தற்கால மகாராட்டிரம் மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் எனும் சிற்றூரில், மறைந்த சூபி அறிஞர் சேக் ஜெயினுதீன் சிராசி தர்கா வளாகத்தில் எளிமையான முறையில் அடக்கம் செய்தார்.[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tomb of Aurangzeb
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔரங்கசீப்_கல்லறை&oldid=4232275" இலிருந்து மீள்விக்கப்பட்டது