ஓ. கு. மகேஸ்வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓ. கு. மகேஸ்வரி (பிறப்பு: ஆகத்து 4 1962) தமிழ்நாடு சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஸி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளி, செயிண்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி மற்றும் பெண்டிக் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். தமிழ், ஆங்கிலம், சௌராஸ்டிரம், தெலுங்கு போன்ற மொழிகளில் இவருக்கு தேர்ச்சியுண்டு.

இலக்கியப் பணி[தொகு]

1977ல் எழுத்துலகில் பிரவேசித்த இவரின் முதல் படைப்பான ‘நினைவு’ எனும் சிறுகதை ‘சூரியன்’ எனும் கையெழுத்துப் பத்திரிகையில் வெளிவந்தது. இதுவரை இவர் 20 சிறுகதைகளை எழுத்துலகிற்கு வழங்கியுள்ளார்.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்[தொகு]

  • தெளிவு பிறந்த போது எனும் இவரின் கதைக்கான பாராட்டு, விருது (1996)
  • இருபது வெள்ளி எனும் இவரின் சிறுகதைக்கான 1ம் பரிசு (1997)
  • தலைமுறைக் கனவுகள் எனும் இவரின் சிறுகதைக்கான 1ம் பரிசு

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._கு._மகேஸ்வரி&oldid=2713072" இலிருந்து மீள்விக்கப்பட்டது