ஓரிதழ் தாமரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓரிதழ் தாமரை
Hybanthus enneaspermus at Talakona forest, in Chittoor District of Andhra Pradesh, இந்தியா.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
பேரினம்:
Hybanthus
இனங்கள்

See text.

ஓரிதழ் தாமரை (தாவர வகைப்பாடு:Ionidium suffruticosum) வயோலேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாக அறியப்படுகின்றது. இது ஒரு பூக்கும் தாவர இனம் ஆகும். இவை ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசுதிரேலியா போன்ற நாடுகளில் வளருகிறது.[1]

பெயர்கள்[தொகு]

ஓரிதழ் தாமரைக்கு ரத்தனபுருஷ், ரத்னாயுரஷரி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. ஒரே இதழ் கொண்ட மலர் என்பதால், ‘ஓரிதழ்’ என்றும், தாமரைப் பூவின் நிறத்தோடு (வெளிர் சிவப்பு) இது உள்ளதால்,தாமரை என்ற இரு சொற்களும் இணைந்து ஓரிதழ்தாமரை என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. இதைத்தவிர தாமரை மலருக்கும் ஓரிதழ் தாமரைக்கும் எவ்விதத் தொடர்பு கிடையாது.

விளக்கம்[தொகு]

ஓரிதழ் தாமரையானது நிலத்தில் வளரும் மிகச் சிறிய செடி வகையினம் ஆகும். ஓரளவுக்கு ஈரப்பதம் மிக்க இடங்களில் வளரும். இது நீளமான இலைகளை உடையது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஓரிதழ் தாமரை en PlantNet
  2. டாக்டர் வி.விக்ரம் குமார் (13 அக்டோபர் 2018). "தரமான தாதுவுக்கு 'தாமரை'". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரிதழ்_தாமரை&oldid=3889646" இலிருந்து மீள்விக்கப்பட்டது