ஒரூஉ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரூஉ என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.

கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது:

"இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம்
இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்
வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்
வருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே." (யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்)

சீர்களின் அமைப்பு[தொகு]

செய்யுளின் அடியில் 1 மற்றும் 4 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெரின் ஒரூஉத்தொடை விகற்பம் எனப்படும்.

தொடை விகற்ப வகைகள்[தொகு]

பின்வரும் 5 வகைகளில் இவ்விகற்பம் அமையும்:

  1. ஒரூஉ மோனைத் தொடை
  2. ஒரூஉ இயைபுத்தொடை
  3. ஒரூஉ எதுகைத்தொடை
  4. ஒரூஉ முரண் தொடை
  5. ஒரூஉ அளபெடைத்தொடை

எடுத்துக்காட்டுகள்[தொகு]

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்." (435-வது திருக்குறள், பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்)

மேற்கண்ட குறளில் முதலடியில் முதல் மற்றும் நான்காம் சீர்கள் "ர" என்று எதுகையெடுக்கின்றன. எனவே இச்செய்யுள் ஒரூஉ எதுகைத்தொடை வகையை பின்பற்றுகிறது எனலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரூஉ&oldid=1397685" இலிருந்து மீள்விக்கப்பட்டது