ஒருங்கிணைந்த தோட்டக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை (Synergistic gardening) என்பது எமிலியா ஹஸ்லிப் என்பவர் உருவாக்கிய இயற்கைத் தோட்டக்கலை முறை ஆகும். இந்த முறையானது நிலைகொள் வேளாண்மையாலும், மசனோபு ஃபுக்குவோக்கா மற்றும் மார்க் போன்ஃபில்ஸ் ஆகியோரின் பணியினாலும் வலுவாக தாக்கம் பெற்றது.[1] தோட்டத்தை நிறுவிய பிறகு, தோண்டுதல், உழுதல் அல்லது உழுதுபயிரிடுதல் போன்றவை தேவைப்படாது. மேலும் வெளிப்புற உள்ளீடுகளான இயற்கை உரம் மற்றும் பிற வேதியியல் உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் போன்றவைகள் இட அவசியம் இல்லை. தாவரங்கள் தேர்வு, ஈர வைக்கோல் கொண்ட தழைக்களம் மற்றும் தாவர மிகுதிகளை மறுசுழற்சி செய்தல் போன்றவைகளால் மண்வளம் பராமரிக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Synergistic Garden". Excerpt from Permaculture Magazine. Issue 19. Spring 1999. Archived from the original on 16-03-2006. பார்க்கப்பட்ட நாள் 14-01-2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)CS1 maint: unfit URL (link)
  2. Emilia Hazelip’s emails (x105) articulating her practises and positions. Dec. 2001 – Jan. 2003 பரணிடப்பட்டது 2020-05-28 at the வந்தவழி இயந்திரம்