ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சி
Jump to navigation
Jump to search
ஒன்னப்பகவுண்டனஅள்ளி , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
அமைவிடம்[தொகு]
இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [1] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 1515, மொத்த மக்கள் தொகைகள் 6127,[2]. இதில் 3041 ஆண்களும், 3086 பெண்களும் அடங்குவர். இங்கு ஒவ்வொரு வருடமும் மே அல்லது சூன் மாதத்தில் மாரியம்மன் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாரியம்மன் கடவுள் மழை மற்றும் காவல் தெய்வமாக வணங்குகின்றனர்.