உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ. ஞானதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ. ஞானதாசன்
(ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்)பிசி
பிறப்புசாவகச்சேரி
படித்த கல்வி நிறுவனங்கள்டிரிபெர்க் கல்லூரி ,ஹார்ட்லி கல்லூரி ,யாழ்ப்பாணக் கல்லூரி,இலங்கை சட்டக் கல்லூரி,மேற்கு இந்தியப் பல்கலைக்கழகம்
பணிவழக்கறிஞர்

ஐ. ஞானதாசன் (A.Gnanathasan)(ஐயத்துரை ஞானதாசன்) இலங்கையின் முன்னணி தமிழ் சட்டத்தரணியும், சனாதிபதியின் சட்ட ஆலோசகரும் ,அரசுத் தலைமை வழக்குரைஞரும் ஆவார்.

துவக்ககால வாழ்க்கையும் குடும்பமும்

[தொகு]

ஞானதாசன் வடக்கு இலங்கையில் உள்ள சாவகச்சேரியில் பிறந்தார்.[1][2] இவர் திரிபெர்க் கல்லூரியின் பிரதி முதல்வர் வி. என். ஐயத்துரை, திரிபெர்க் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய பி. ஐயத்துரை ஆகியோரின் மகன் ஆவார்.[1][2] இவர் திரிபெர்க் கல்லூரி, ஹார்ட்லி கல்லூரி , யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2] பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து, சட்டத்தரணியாகத் தகுதி பெற்றார்.[2] கல்லூரியில், இவர் 1978 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் "நீதிமன்றத்தில் உரையாற்றுவதற்கான சர் பொன்னம்பலம் இராமநாதன் தங்கப் பதக்கத்தை" வென்றார்.[2]

தொழில்

[தொகு]

1980ல் வழக்கறிஞராகப் பதிவு பெற்ற பிறகு, ஞானதாசன் சனாதிபதி சட்ட ஆலோசகர் ஏ. மகேந்திரராஜாவின் அறைகளில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.[1][2] இவர் சிவநாதன் சட்ட நிறுவனத்தில் பணியாற்றினார்.[1][2] பின்னர் இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்ட ஆலோசகராக சேர்ந்தார்.[1][2] இவர் இலங்கையின் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். மேலும் யாழ்ப்பாணத்தில் நடந்த புகழ்பெற்ற "பாலவி கொலை" வழக்கிலும், மட்டக்களப்பில் நடந்த "அம்பாறை அழகி வழக்கிலும்" பணியாற்றினார்.[2]

ஞானதாசன் 1 சூலை 1992 அன்று ஐக்கிய இராச்சியத்தில் சட்ட ஆலோசகராகத் தகுதி பெற்று ராஜா சட்ட நிறுவனத்தில் பணியாற்றினார்.[1][2] இவர் 11 ஏப்ரல் 1994 அன்று தசுமேனியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக (பாரிஸ்டர் மற்றும் சொலிசிட்டர்) சேர்க்கப்பட்டார்.[1][2] இவர் 2 மே 1994 அன்று நியூ சவுத் வேல்சு உச்ச நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராக சேர்க்கப்பட்டார்.[1][2]

இலங்கையில், ஞானதாசன் 1995இல் மூத்த அரச சட்ட ஆலோசகராகவும், 14 சூலை 1999இல் பிரதி அரசு தலைமை வழக்கறிஞராகவும், 30 ஏப்ரல் 2008இல் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராகவும் ஆனார்.[1][2][3]

ஞானதாசன் 1995 முதல் 2007 வரை இலங்கை சட்டக் கல்லூரியில் குற்றவியல் சட்டத்தில் வருகை விரிவுரையாளராக இருந்தார். மேலும் இக்கல்லூரியில் தேர்வாளர்கள் வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[1][2] இவர் 1998இல் நாடுகளின் பொதுநலவாயம் உதவித்தொகையைப் பெற்ற பிறகு மேற்கிந்தியத் தீவுகள் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தை முடித்தார்.[1][2] இவர் 2003 முதல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் வருகை விரிவுரையாளராகவும் தேர்வாளராகவும் இருந்து வருகிறார்.[1][2] இவர் 9 மார்ச் 2009 அன்று சனாதிபதியின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[1][2]

ஞானதாசன் 2000ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கல்லூரியின் இயக்குநர்கள் குழுவில் சேர்ந்தார். 2002 முதல் 2006 வரை இதன் தலைவராகப் பணியாற்றினார்.[2] இவர் 2000ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (கொழும்பு கிளை) துணைத் தலைவராகவும், 1999 முதல் 2007 வரை ஹரித்லி கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 Maniccavasgar, Chelvatamby (8 March 2009). "Add. Solicitor General to take silk as PC". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/090308/Plus/sundaytimesplus_18.html.
  2. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 Maniccavasgar, Chelvatamby (5 March 2009). "A. Gnanathasan takes Silk as President's Counsel". Daily News (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 10 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090310043435/http://www.dailynews.lk/2009/03/05/news25.asp.
  3. "Law Officers". Attorney-General's Department (Sri Lanka). Archived from the original on 2013-06-22. Retrieved 2013-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._ஞானதாசன்&oldid=4559994" இலிருந்து மீள்விக்கப்பட்டது