ஏ. வி. சி. பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 11°06′15″N 79°41′33″E / 11.10425°N 79.69255°E / 11.10425; 79.69255
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. வி. சி. பொறியியல் கல்லூரி
உருவாக்கம்1996 (1996)
சார்புஅண்ணா பல்கலைக்கழகம்
தலைவர்முனைவர். என். விஜயரங்கன்
முதல்வர்முனைவர். சி. சுந்தர் ராஜ்
துறைத்தலைவர்முனைவர். ஞ. பிரதிப்
பணிப்பாளர்முனைவர். ம. செந்தில்முருகன்
அமைவிடம், ,
11°06′15″N 79°41′33″E / 11.10425°N 79.69255°E / 11.10425; 79.69255
இணையதளம்link

ஏ. வி. சி. பொறியியல் கல்லூரி (A. V. C. College of Engineering) என்பது தமிழ்நாட்டின், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும்.

வரலாறு[தொகு]

ஏ. வி. சி பொறியியல் கல்லூரியானது 1996 ஆம் ஆண்டு ஏ. வி. அறக்கட்டளைகளால் தொடங்கப்பட்டது, இந்த அறக்கட்டளையானது 1955 இல் ஏ. வி. சி கல்லூரியையும் 1983 இல் ஏ. வி. சி பால்தொழில்நுட்பக் கல்லூரியையும் தொடங்கி அதன் மூலம் அதன் கல்வி சேவைகளைத் தொடங்கியது.

இப்பொறியியல் கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (AICTE) ஒப்புதல் அளித்துள்ளது மேலும் இது ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும்.

இணைவு[தொகு]

ஏ. வி. சி பொறியியல் கல்லூரியானது தற்போது சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]