உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. சார்லசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. சார்லசு (A. Charles) என்பவர் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.[1] இவர் 1984, 1989, 1991 ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். முன்னாள் அரசு ஊழியரான இவர், தென்னிந்திய திருச்சபையின் தெற்கு கேரளா டயோசிஸின் கல்வி மற்றும் நலச் சங்கங்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். கருணாகரன் வழிகாட்டுதலின் பேரில் கேரள அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பதிவியைத் துறந்து 1984-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார்.[2] சார்லசு 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் நாளன்று தனியார் மருத்துவமையில் வயது முதிர்வு காரணமாக சிகிச்சையிலிருந்தபோது காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Former MP A Charles no more, Kerala - Mathrubhumi English News Online". 2014-10-27. Archived from the original on 27 October 2014. Retrieved 2022-02-14.
  2. "Former MP A Charles no more, Kerala - Mathrubhumi English News Online". web.archive.org. 2025-02-22. Retrieved 2025-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சார்லசு&oldid=4214270" இலிருந்து மீள்விக்கப்பட்டது