ஏறைக்கோன்
தோற்றம்
ஏறை என்பது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மலைகளில் ஒன்று.
இந்த மலையை ஆண்ட ஏறைக்கோன் சிறந்த போர்வீரர். குறமகள் இளவெயினி என்னும் பெண்பாற்புலவர் ஏறைக்கோன் வீரத்தைப் பாராட்டிப் பாடியுள்ளார்.[1] இந்தப் பாடலில் இவரது வள்ளண்மை கூறப்படவில்லை. என்றாலும் பாராட்டிய புலவரை இவர் பேணியிருக்கலாம்.
'பெருங்கல் நாடன்' என இவர் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.
இவரது நான்கு பண்புகள் பாடலில் காணப்படுகின்றன.
- இவரைச் சேர்ந்தவர்கள் இவருக்குத் தீங்கிழைத்தால் அதனை இவர் பொறுத்துக்கொள்வாராம்.
- பிறர் தவறு செய்தால் அதற்காகத் தான் நாணுவாராம்.
- தான் போரிடும் படைக்குப் பழி வாராமல் போரிடும் வல்லமை பெற்றவராம்.
- வேந்தன் அவையில் பீடுடன் வீரநடை போடுவாராம்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ புறநானூறு 157