ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு
Jump to navigation
Jump to search
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு (செங்கலடி) இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 39 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- ஆறுமுகத்தான் குடியிருப்பு,
- செங்கலடி,
- கெமுணுபுர,
- இரளக்குளம்,
- ஐயன்கேணி,
- கண்ணகிபுரம்,
- களுவன்கேணி,
- கரடியனாறு,
- கித்துள்வெவ,
- கொடுவாமடு,
- கொம்மாதுறை,
- கோப்பவெளி,
- குமாரவேலியர் கிராமம்,
- மரப்பாலம்
- மாவடிவேம்பு
- மீராகேணி
- மிச் நகர்
- மைலம்பாவெளி
- மைலவட்டவான்
- பாலச்சோலை
- பன்குடாவெளி
- பெரியபுல்லுமலை
- ரூகம்
- சவுக்கொடி
- சித்தாண்டி
- தலாவை
- தன்னாமுனை
- வந்தாறுமூலை
- வேப்பவெட்டுவான்
ஆகிய இடங்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கிலும், மேற்கிலும் அம்பாறை மாவட்டமும், கிழக்கில் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, இந்தியப் பெருங்கடல் என்பனவும்; வடக்கில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவும், எல்லைகளாக உள்ளன.
இப்பிரிவு 695 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].