எஸ். ஏ. உதயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ஏ. உதயன் ஈழத்துப் புதின எழுத்தாளர். ஒரு நடிகனாக, ஒப்பனைக் கலைஞனாக, நாடகத் தயாரிப்பாளனாக, நெறியாளனாக அரங்கியல் துறையின் பன்முக ஆளுமை கொண்டவர் இவர்.

அறிமுகம்[தொகு]

இவரது இயற்பெயர் ஏ. ஜே. கே. துரம். இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் பேசாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

கலை இலக்கியப்பணி[தொகு]

கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர். நாவல் இலக்கியமே இவரை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மற்றும் ஒரு நடிகனாக, ஒப்பனைக் கலைஞனாக, நாடகத் தயாரிப்பாளனாக, நெறியாளனாக அரங்கியல் துறையின் பன்முக ஆளுமை கொண்டவராகவும் திகழ்கின்றார்.

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • லோமியா (நாவல்) - 2008, சாளரம் வெளியீடு, சென்னை.
  • தெம்மாடுகள் (நாவல்) - 2009, திருப்புமுனை வெளியீடு, மன்னார்,
  • வாசாப்பு (நாவல்) - 2010, திருமறைக் கலாமன்ற வெளியீடு, கொழும்பு.
  • சொடுதா - (நாவல்) - 2011, கலையருவி வெளியீடு, மன்னார்.
  • குண்டுசேர் - (சிறுகதைத் தொகுப்பு) - 2012

விருதுகள்[தொகு]

  • லேமியா - 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் இலக்கிய விருது, பவளசுந்தராம்பாள் தமிழியல் விருது, இலங்கை இலக்கியப் பேரவை விருது ஆகியவற்றைப் பெற்றது.
  • தெம்மாடுகள் - 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்தநூல் இலக்கிய விருது தமிழியல் விருது ஆகியவற்றைப் பெற்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._உதயன்&oldid=3236557" இலிருந்து மீள்விக்கப்பட்டது