எஸ். எஸ். பொன்முடி (பல்லடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். எஸ். பொன்முடி (S. S. Ponmudi)(பிறப்பு 21 சூலை 1955) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியினைச் சார்ந்தவர்.[1] சூளூர் நகரப் பஞ்சாயத்துத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். பொன்முடி 1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 7. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.