எஸ். எம். சீனிவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். எம். சீனிவேல் (S. M. Seenivel) (இறப்பு 25 மே 2016) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் 15ஆவது சட்டமன்றத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ,[1] இவர் முன்னதாக இதே தொகுதியில் 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் 13 ஆவது சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

சீனிவேல் 2016 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் அவரது வெற்றி அறிவிக்கப்படும் முன்னதாக பக்கவாத நோய்க்கு ஆளாகி மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு மே 25 ஆம் நாள், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் நிகழ்விற்கு சில மணி நேரங்கள் முன்னதாக சிகிச்சையின் போதே இறந்தார். [1] ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக மற்றொரு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட மன்ற உறுப்பினர் மரியம் பிச்சை பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்னதாக இறந்து போனார். .[2]

தனிப்பட்ட வாழ்க்கை சீனிவேலுக்கு ஒரு மனைவியும், மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Newly elected AIADMK MLA dies of heart attack hours before oath-taking". Hindustan Times. 25 May 2016. http://www.hindustantimes.com/india/aiadmk-mla-seenivel-dies-of-heart-attack-hours-before-swearing-in-ceremony/story-kShJOsw94DZHmmT8691TeJ.html. பார்த்த நாள்: 2017-05-05. 
  2. "Seenivel is 2nd MLA to pass away on oath taking day in 5 yrs". The Indian Express. PTI. 25 May 2016. http://indiatoday.intoday.in/story/seenivel-is-2nd-mla-to-pass-away-on-oath-taking-day-in-5-yrs/1/676924.html. பார்த்த நாள்: 2017-05-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._சீனிவேல்&oldid=3023587" இலிருந்து மீள்விக்கப்பட்டது